தஞ்சாவூர், மார்ச் 9- தஞ்சாவூரில், கல்லூரி மாணவி ஒரு வர், ஒரு ஏ-4 அளவிலான தாளில், 135 கோவில்களை, பேனாவை மட்டுமே பயன்படுத்தி வரைந்து அசத்தியுள்ளார். தஞ்சாவூர் அருகே வல்லம் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் அய்யப்பன் ஓட்டுநர், இவரது மனைவி சசிகலா. இவர்களின் மகள் யமுனா (19). இவர் மருதுபாண்டியர் கலைக்கல்லூரியில் 2-ஆம் ஆண்டு பேஷன் டெக்னாலஜி படித்து வருகிறார். இவருக்கு இரண்டு தம்பி, ஒரு தங்கை உள்ளனர். தற்போது, யமுனா ஏ-4 அளவிலான தாளில், பேனாவை மட்டுமே பயன்படுத்தி, தமிழ்நாட்டில் பிரசித்தி பெற்ற தஞ்சாவூர் பெரியகோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், பழனி முருகன் கோவில் என 135 கோவில்களை வரைந்து அசத்தி வரு கிறார். அவரின் ஓவியத்தை பார்த்து கல்லூரி நிர்வாகம், தோழிகள், பெற்றோர் என பல ரும் பாராட்டி வருகின்றனர். இதுகுறித்து யமுனா கூறுகையில், ‘‘சிறு வயதில் இருந்தே ஓவியம் வரையப் பழகி வருகிறேன். கடந்த ஒரு மாதமாக, ஏ-4 வடிவிலான தாளில், கோவில்களை பென்சில், ரப்பர் இல்லாமல், பேனாவை மட்டுமே பயன்படுத்தி வரைய வேண்டும் என முயற்சி செய்து வரைந்துள்ளேன். இது தொடர்பாக சாதனை முயற்சியாக பதிவு செய்ய முயன்று வருகிறேன். அடுத்ததாக ஏ-3 வடிவிலான தாளில், இந்தியாவில் உள்ள 300 கோவில்களை வரைய பயிற்சி எடுத்து வருகிறேன்’’ என்றார்.