districts

தஞ்சை மாவட்டத்தில் 1,100 ஹெக்டேர் நெற்பயிரை மழைநீர் சூழ்ந்துள்ளது: ஆட்சியர்

தஞ்சாவூர், செப்.28 - தஞ்சாவூர் மாவட்டத்தில் 1,100 ஹெக் டேரில் நெற்பயிர்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது என மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரி வித்துள்ளார். தஞ்சாவூர் அருகே ரெட்டிபாளையத் திலுள்ள கால்நடை மருத்துவமனை யில் புதன்கிழமை நடைபெற்ற செல்லப் பிராணிகளுக்கான வெறிநோய் தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: “நெல் கொள்முதலை பொருத்த வரை செப்டம்பர் 1 ஆம் தேதியே புதிய  காரீப் கொள்முதல் பருவத்தைத் தொடங் குவதற்கான அரசாணையைத் தமிழக முதல்வர் பெற்றுக் கொடுத்துள்ளார்.  மாவட்டத்தில் நிகழாண்டு வரலாறு  காணாத வகையில் 72,000 ஹெக்டேரில் குறுவை பயிரிடப்பட்டது. இதில், 43,000 ஹெக்டேரில் அறுவடைப் பணி கள் முடிவடைந்துள்ளன. இன்னும் 30, 000 ஹெக்டேர் மட்டுமே மீதமுள்ளது. செப்டம்பர் மாதத்தில் மட்டும் நெல்  கொள்முதல் நிலையங்களில் 70,000  டன்கள் நெல் கொள்முதல் செய்யப் பட்டுள்ளன. சனி, ஞாயிற்றுக்கிழமை கள், அரசு விடுமுறை நாள்களிலும் விடுப்பு இல்லாமல் நுகர்பொருள் வாணிபக் கழகப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

ஈரம் காத்த நெல்லை கொள்முதல் செய்தால், நிறைய இழப்பு ஏற்படும். நெல்லும் கருப்பு நிறத்தில் மாறி விடும். எனவே நெல்லை காய வைத்து,  17 சதவீத ஈரப்பதத்துக்குள் கொடுத்தால்  வசதியாக இருக்கும். இந்தாண்டு பருவ மழை அக்டோபர் 20 ஆம் தேதிக்கு பிறகு தொடங்கும் என வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதனி டையே, அக்டோபர் 8 ஆம் தேதிக்கு பின்னர் மற்றொரு தொடர் மழை இருக்கும் என்ற தகவலும் வருகிறது.  எனவே மழை இல்லாத காலக்கட்டத் தில் நெல்லை விரைவாக அறுவடை செய்தால், மாவட்ட நிர்வாகம் தேவை யான இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்கத் தயாராக இருக்கிறது. மாவட்டத்தில் தற்போது 267 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் இருக்கின்றன. மேலும் 100 இடங்களில் திறக்குமாறு கூறினா லும் தயாராக உள்ளோம். கூடுதலாக நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்து, கொள்முதல் செய்ய தயாராக  இருக்கிறோம். எனவே ஈரப்பதத்தை மட்டும் எப்படியாவது காய வைத்துக் கொடுத்தால், அனைவருக்கும் பயனுள் ளதாகவும் எளிதாகவும் இருக்கும். கடந்த இரு நாட்களாக இரவு நேரத்தில்  மழை அதிக அளவு பெய்தது. இது தொடர்பாக எடுக்கப்பட்ட கணக்கெடுப் பில் 1,100 ஹெக்டேரில் மழைநீர் சூழ்ந்தி ருப்பது தெரிய வந்தது. ஓரிரு நாளில்  தண்ணீர் வடிந்த பிறகே உண்மை யான பாதிப்பு தெரிய வரும். பாதிக்கப் படும் விவசாயிகளுக்கு பேரிடர் மேலாண்மை அமைப்பு மூலம் உரிய நிவா ரணம் பெற்றுக் கொடுக்கப்படும்.”  இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.

;