தஞ்சாவூர், மார்ச் 15- பேராவூரணி பேரூராட்சி யில் நிலுவையின்றி 100 சத வீதம் வரி வசூல் செய்து முடிக் கப்பட்டுள்ளது. இதற்கு கார ணமான பேரூராட்சித் தலை வர் சாந்தி சேகர், பேரூராட்சி செயல் அலுவலர் பா.பழனி வேலுவை உயர் அலுவலர் கள் பாராட்டினர். தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தேர்வு நிலை பேரூராட்சியில் சொத்து வரி ரூபாய் 1.4 கோடி, குடிநீர்க் கட்டணம் ரூ.35 லட்சம், வரி யற்ற இனங்கள் ரூ.46 லட்சம் மற்றும் உரிமைக் கட்டணம் தொழில்வரி என அனைத்து வரிகளும் 100 சதவீதம் நிலு வையின்றி வசூல் செய்யப் பட்டுள்ளது. இதுகுறித்து பேரூ ராட்சி செயல் அலுவலர் பா. பழனிவேலு கூறியதாவது, மாவட்ட ஆட்சித் தலை வர் தினேஷ் பொன்ராஜ் ஆலி வர், பேரூராட்சிகள் உதவி இயக்குநர் கனகராஜ் ஆகி யோர் உத்தரவின் படி, பேரூ ராட்சி தலைவரின் அறிவு றுத்தலின் பேரில், பேரூராட்சி துணைத்தலைவர், உறுப்பி னர்கள் ஒத்துழைப்புடன், பேரூராட்சிப் பணியாளர்கள் முழு வீச்சில் பணியாற்றி நூறு சதவீதம் வரி வசூல் செய்துள்ளனர். இதற்கு ஒத்துழைப்பு அளித்த பொது மக்கள், வணிகர்கள், வரி செலுத்திய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார். தஞ்சாவூர் மாவட்டத்தி லேயே பேராவூரணி பேரூ ராட்சி 100 சதவீதம் வரி வசூல் செய்து முடித்த பேரூராட்சி என்ற பெயரைப் பெற்றுள்ளது.