தஞ்சாவூர், மே 25- தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.1.86 கோடி மதிப்பீட்டில் 10 புதிய கட்டிடங்களை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அரசு தலைமை கொறடா முனைவர். கோவி.செழியன் ஆகி யோர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் திறந்து வைத்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் அம்மாபேட்டை ஒன்றியம் சாலியமங்கலம் ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடமும், பாபநாசம் ஒன்றி யம் ரெகுநாதபுரம் ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடமும், கோவிந்தநாட்டுசேரி ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடமும், பட்டுக்கோட்டை ஒன்றியம் சேண்டாக் கோட்டை ஊராட்சியில் புதிய அங்கன்வாடி கட்டிடமும், சேதுபாவாசத்திரம் ஒன்றியம் சோலைக்காடு ஊராட்சியில் புதிய உணவு தானிய கிடங்கு கட்டிடமும், திருவோணம் ஒன்றியம் அக்கரைவட்டம் ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடமும், தோப்புவிடுதி ஊராட்சியில் புதிய அங்கன் வாடி கட்டிடமும், கனிமம் மற்றும் சுரங்கம் துறை சார்பில் பாபநாசத்தில் கொந்தகை ஊராட்சியில் சமுதாயக் கூட கட்டிடமும், ஒருங்கிணைந்த பள்ளிகள் சீரமைப்பு திட்டத்தின் கீழ் பட்டுக்கோட்டை ஒன்றியம் தாமரங்கோட்டை மேலக்காடு புதிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கட்டி டத்தையும், ஒருங்கிணைந்த பள்ளிகள் சீர மைப்பு திட்டத்தின் கீழ் அதிராம்பட்டினம் நக ராட்சியில் புதிய பள்ளி கட்டிடம் என மொத்தம் ரூ.186.02 லட்சம் மதிப்பீட்டில் 10 புதிய கட்டி டங்கள் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் துரை சந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி. நீலமேகம் (தஞ்சாவூர்), கா.அண்ணாதுரை (பட்டுக்கோட்டை), என்.அசோக்குமார் (பேரா வூரணி), முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏனாதி பாலு, சேதுபாவாசத்திரம் ஒன்றியப் பெருந்தலைவர் மு.கி.முத்துமாணிக்கம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்ட னர்.