districts

அடுக்குமாடி குடியிருப்பு கேட்டு திருமாவளவன் எம்.பி., கடிதம்

சேலம், டிச.31- சேலம், லீ பஜார் பாவேந்தர் தெரு மக்களின் நீண்ட நாள் கோரிக்கை யான அடுக்கு மாடி குடியிருப்பை உடனடியாக கட்டித்தருமாறு விடு தலை சிறுத்தைகள் கட்சியின் தலை வர் திருமாவளவன் சேலம் மாவட்ட  ஆட்சியருக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் கூறியிருப்பதா வது, சேலம் மாநகரம், அசிரிபள்ளம், பாவேந்தர் தெருவில் சுமார் 300 குடும் பங்கள் வசித்து வருகின்றன. அப் பகுதி மக்கள் இடவசதி கோரியதன் அடிப்படையில், கடந்த 2009ஆம் ஆண்டு லீ பஜார் அமைந்துள்ள சுமார் 1 ஏக்கர் 67 சென்ட் நிலத்தை அரசு புறம்போக்கு நிலமாக வகைப் படுத்தி, அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு வேளாண்மைத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்  அடிக்கல் நாட்டினார். இந்நிலையில் லீ பஜார் வணிக சங்கத்தினர் சென்னை  உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் தனர். இதையடுத்து 2019ஆம் ஆண்டு பாவேந்தர் தெருவைச் சேர்ந்த பொது மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு உத்தரவு வழங்கப்பட் டுள்ளது. இந்நிலையில், குடிசைமாற்று வாரிய அதிகாரிகள் லீ பஜாரை பார் வையிட்டு போதிய வழித்தடம் இல்லை என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதாக கூறப்படுகி றது. இந்நிலையில்,  குடிசைமாற்று வாரிய நிர்வாக பொறியாளர் லீ ப ஜாரை அரசுக்கே திரும்ப ஒப்படைப் பதாக தெரிவித்துள்ளதாக தெரிகி றது. நிலத்தை திரும்ப கொடுக்கும் முடிவை கைவிட வேண்டும். கடந்த 2009 ஆம் ஆண்டு முதல்  2022 ஆண்டு வரை அடுக்குமாடி குடி யிருப்புகள் கேட்டு போராடிவரும் மக்களின் வாழ்வதாரத்தை கருத்தில் கொண்டு, நகர்ப்புற வாழ்விட மேம் பாட வாரியத்தின் மூலம் அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு ஆவண செய்யுமாறு கேட்டு கொள் கிறேன் என அதில் கூறப்பட்டுள்ளது. இக்கடிதத்தை விசிக சேலம் மாந கர மாவட்ட துணைச்செயலாளர் காயத்ரி மற்றும் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி யாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டி  தர வேண்டுமென கோரிக்கை விடுத் தனர்.