districts

img

‘பாஜக இனி ஆட்சிக்கு வரக்கூடாதுங்க’

சேலம் மாவட்டம் மேச்சேரி ஒன்றியத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மேவை.சண்முகராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ராமமூர்த்தி, ஒன்றிய செயலாளர் ஜி.மணி முத்து,  ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கே.மாது, ஆர்.பழனி (பேரூ ராட்சி கவுன்சிலர்), விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் பி.தங்கவேலு உள்ளிட்டோர் தேர்தல் நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டனர்.அப்போது, மேச்சேரி குட்டப்பட்டி நால் ரோடு பகுதியில் உள்ள ஒரு  கோவிலில் மயில்சாமி என்கிற பூசாரி பூசை செய்து கொண்டிருந்தார். 

மார்க்சிஸ்ட் கட்சியினர் வீடுவீடாக தேர்தல் நிதி வசூலில் ஈடுபட்டு வருவதைக் கண்ட அவர் தோழர்களின் அருகில் வந்தவர், “மக்களின் பக்தி உணர்வை அநியாயமாக அரசியல் ஆக்குகிறார்கள். இதுபோன்ற பக்தி உணர்வை தேர்தல் ஆதாயத்திற்காக பயன்படுத்தும் பாஜகவை இந்த தேர்தலில் நீங்கள் வீழ்த்தியே ஆக வேண்டும்’’ என்றார். “பாஜக வீழ்ந்தால்தான் நாட்டின் நலன் காக்கப்படும் இந்தாங்க” என, கையில் கொண்டு வந்த பிரசாதத்தையும் ரூ.10 ஆயிரம் நிதியையும் கொடுத்து வாழ்த்தினார். இது வசூல் இயக்கத்தில் ஈடுபட்ட தோழர்களுக்கு உற்சாகத்தை அளித்தது.