தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் போராட்ட எதிரொலியாக, 25 ஆண்டுகளுக்கு பிறகு மலைக்குறவர் பழங்குடியின சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே 25 ஆண்டுகளுக்குப் பிறகு 38 மாணவர்களுக்கு மலைக் குறவன் பழங்குடியினர் இன சான்றிதழ் வழங்கிய வருவாய் வட்டாட்சியரை மலைவாழ் மக்கள் சங்க நிர்வாகிகள் மாணவர்கள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். சிபிஎம் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டில்லி பாபு இதுபோன்று அனைத்து பகுதிகளிலும் விரைவாக மலைக் குறவர் இனச் சான்றிதழ் வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பழங்குடி இன மலைவாழ் மக்கள் சுமார் ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், பழங்குடியின மலைவாழ் மக்களின் குழந்தைகள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சாதி சான்றிதழ் தேவை குறித்து மலைகுறவர், பழங்குடியினர் மக்கள் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சாதிச் சான்றிதழ் கேட்டு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர் அலுவலகம் என அனைத்து அரசு அலுவலகங்களிலும் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததையடுத்து, பழங்குடியின மலைவாழ் மக்கள் தனது குழந்தைகள் குடும்பத்துடன் பெத்தநாய்க்கன்பாளையம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கடந்த 10 நாட்களுக்கு முன்பு 500-க்கும் மேற்பட்ட மலைக் குறவர் இன மக்கள் குடும்பத்துடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது வட்டாட்சியர் அன்புசெழியன் இரண்டு நாட்களில் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததின் பேரில் கலைந்து சென்றனர். தற்போது பழங்குடியின மலைக்குறவர் 38 பள்ளி மாணவர்களுக்கு சாதி சான்றிதழ் கேட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்ததன் பேரில் கோட்டாட்சியர் ரமேஷ் விரைந்து விசாரணை செய்து உடனடியாக 38 மாணவர்களுக்கும் சாதி சான்றிதழ் வழங்கினார் ,
இதனையடுத்து பழங்குடியின மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவரும் முன்னால் அரூர் சட்ட மன்ற உறுப்பினருமான டில்லி பாபு தலைமையில் பள்ளி மாணவர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் இன்று நேரில் வருவாய் கோட்டாட்சியரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்,
பழங்குடியின மக்களுக்கு (25)கால் நூற்றாண்டுக்குபிறகு சாதி சான்றிதழ் கிடைத்துள்ளது போராட்டத்திற்கான முதல் வெற்றி என மகிழ்ச்சியோடு தெரிவித்தனர். இதில் பழங்குடியின மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.டில்லிபாபு, ஏ.வி.சண்முகம், சிபிஎம் தாலுகா செயலாளர் எ.முருகேசன், செந்தில்குமார் உள்ளிட்டு பலர் பங்கேற்றனர்.