districts

img

சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் மாநில மாநாடு

சேலத்தில் நடைபெறவுள்ள சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தின் மாநில மாநாட்டையொட்டி விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கொடிப் பயணம் புறப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன் கொடியை வழங்க சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பழனி பெற்று கொண்டார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.குமார், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஏ.சகாதேவன், எஸ்.பிரகாஷ், கே.வீரமணி, பி.வீரமணி, மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் அரிகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.