கொங்கணாபுரம் அருகே 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம் , இடைப்பாடி அருகே கொங்கணாபுரத்தைச் சேர்ந்த தம்பதிக்கு 8 மற்றும் 6 வயதில் 2 மகள்கள் உள்ளனர் . இவர்கள் இருவரும் அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு மற்றும் ஒன்றாம் வகுப்பு படித்து வருகின்றனர்.
கடந்த சனியன்று, தம்பதிகள் கூலி வேலைக்கு சென்று விட்டனர். அப்போது , பக்கத்து வீட்டைச் சேர்ந்த கூலித்தொழிலாளி கோவிந்தராஜ் ( 49 ) என்பவர் , வீட்டில் தனியாக இருந்த சிறுமிகளை , பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார் .
மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பிய பெற்றோர்களிடம் . நடந்த சம்பவத்தை கூறி, சிறுமிகள் அழுதுள்ளனர் .
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் , சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர் .
அதன் பேரில் , வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய கொங்கணாபுரம் போலீசார் , கோவிந்தராஜை போக்சோ சட்டத்தில் ஞாயிறன்று கைது செய்தனர். பின்னர் , சங்ககிரி நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர் .