districts

img

சேலம் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கண்களை கட்டிக்கொண்டு சைக்கிள் பயணம்

சேலம்: பாலியல் வன்கொடுமைக்கு எதிராக

கண்களை கட்டிக்கொண்டு சைக்கிள் பயணம்

சேலம், ஜன.2-

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக சேலத்தில், 11 வயது சிறுவன் கண்களை கட்டிக்கொண்டு சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக அரசு மற்றும் பல தன்னார்வ அமைப்பினர் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் சேலம் மாவட்டம், மரவனேரி பகுதியைச் சேர்ந்த கராத்தே பயிர்சியாளர் அருள் என்பவரின் மகன் சரண் தேவ் (11), பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி கண்களை கட்டிக்கொண்டு 20 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த சைக்கிள் பயணத்தை சேலம் வடக்கு காவல் துணை ஆணையாளர் மாடசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சேலம் அடிவாரம் பகுதியில் தொடங்கிய இந்த விழிப்புணர்வு பயணம் கோரிமேடு, அஸ்தம்பட்டி, ஐந்து ரோடு ஜங்ஷன், புதிய பேருந்து நிலையம் வழியாக 20 கிலோ மீட்டர் தூரம் கடந்து காந்தி விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது. சுமார் 1 மணி நேரம் 3 நிமிடம் 26 வினாடிகளில் இந்தச் சாதனையை செய்த சிறுவனை பாராட்டி, நோபல் வேர்ல்டு ரெக்கார்டு சார்பில் உலக சாதனை பட்டம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனை வடக்கு காவல் துணை ஆணையாளர் மாடசாமி சிறுவனுக்கு வழங்கினார்.