சேலம், ஏப்.3- நூல் விலை உயர்வு காரணமாக ஜவுளித்துறை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, ஜவுளி உற்பத்தி யாளர்கள் வேதனை தெரிவித்துள் ளனர். சேலம் மாவட்டத்தில் ஜவுளி உற்பத்தி முக்கிய தொழிலாக உள்ளது. இதை நம்பி லட்சக்கணக் கான தொழிலாளர்கள் உள்ளன. இந்நிலையில், ஜவுளி உற்பத்திக்கு பயன்படுத்தும் முக்கிய மூலப்பொ ருளான நூல் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதனால் ஜவுளி உற்பத்தியாளர்கள் கடு மையாக பாதிக்கப்பட்டு வருகின்ற னர். குறிப்பாக வேட்டி, சேலை, துண்டு உள்ளிட்ட பல்வேறு துணி வகைகளை தயாரிக்க 40 ஆம் நம்பர் நூலையே நெசவாளர்கள் அதிகளவில் பயன்படுத்தி வரு கின்றனர். கடந்த ஆண்டு அக்டோ பர் மாதம் 50 கிலோ எடை கொண்ட 40 ஆம் நம்பர் நூல் ரூ.9 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப் பட்டது. ஆனால், தற்போது அதன் விலை ரூ.8 ஆயிரம் அதிகரித்து ரூ.17 ஆயிரத்துக்கு விற்பனை செய் யப்பட்டு வருகிறது. சுமார் 90 சத விகிதம் வரையிலும் நூல் விலை உயர்ந்துள்ளதால் ஜவுளி உற்பத்தி யாளர்கள், விசைத்தறி உரிமையா ளர்கள் கவலை அடைந்துள்ளனர். அதேசமயம், நூல் விலை உயர் வால் புதிய ஆர்டர்கள் பெறுவது குறைந்துவிட்டதாக ஜவுளி உற் பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, சேலம் மாவட்ட நூல் வியாபாரிகள் கூறுகையில், ஆந்திரா மற்றும் தமிழகத்தில் கோவை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஜவு ளிக்கு தேவையான நூல்கள் வாங் கப்படுகின்றன. இதில் 40, 60, 30 ரக நூல்கள் அதிகமாக பயன்படுத்தப்ப டுகிறது. பஞ்சு விலை உயர்வால் நூல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே போகிறது. தற்போது 40 ஆம் நம்பர் நூல் டன் ஒன்றுக்கு ரூ.47 ஆயிரம் வரை உயர்ந்து ரூ.4 லட்சத்து 30 ஆயிரத்துக்கு விற் பனை செய்யப்படுகிறது, என்றார். ஜவுளி உற்பத்தியாளர்கள் கூறு கையில், நூல் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் இதை நம்பி உள்ள நாங் கள் மிகவும் சிரமப்பட்டு வருகி றோம். தொடர்ந்து நூல் விலை உயர்ந்தால் ஜவுளி தொழில் முடங்கும் அபாயம் உள்ளது. எனவே, ஜவுளி தொழிலை காப் பாற்ற ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.