districts

சாலை அமைக்க எதிர்ப்பு- மறியல்

சேலம், மார்ச் 31- சேலம் கோட்டை பகுதியில் சாலை அமைக்க மாநக ராட்சி கவுன்சிலர் எதிர்ப்பு தெரிவித்து மறியல் போராட்டத் தில் ஈடுபட்டார். சேலம் மாநகராட்சி 31 ஆவது வார்டில் தார்ச்சாலை அமைக்கும் பணிகள் கடந்த 5 மாதமாக நடைபெற்று வரு கிறது. இந்நிலையில் அப்பகுதியில் சாக்கடை உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்காமல் தார்ச்சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுயேச்சை கவுன்சிலர் சையது மூசா தலைமை யில் அப்பகுதி பொதுமக்கள் வியாழனன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே, அப்பகுதியை சேர்ந்த மற்றொரு தரப்பி னர் அப்பகுதியில் ஒன்று திரண்டு உடனடியாக சாலையை போடும்படி வலியுறுத்தினர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்பின் வாக்கு வாதம் முற்றிய நிலையில், இருதரப்பினரும் ஒருவரை யொருவர் கடுமையாக தாக்கி கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, இருதரப்பினருமிடையே பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்ல வைத்தனர். மேலும், அப்பகுதியில் மேற்கொண்டு அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட் டுள்ளனர்.