districts

img

எட்டு வழிச்சாலை திட்டத்தை கைவிடுக விவசாயிகள் பெருந்திரள் முறையீடு

சேலம், டிச.28- எட்டு வழிச்சாலை திட்டத்தை மத் திய, மாநில அரசுகள் கைவிட வேண் டும் என வலியுறுத்தி பாதிக்கப்பட்ட விவ சாயிகள் பெருந்திரள் முறையீட்டில் ஈடுபட்டனர். சேலம் - சென்னை இடையே ஆயிரக் கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் மற்றும் காடுகளை அழித்தும், மலை களை குடைந்தும் அமைக்கவுள்ள எட்டு வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரி வித்து சேலம்,தருமபுரி, கிருஷ்ணகிரி,  திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய  மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரு கின்றனர். மேலும், இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சூழலில், தற்போது அராஜக மான முறையில் விளை நிலங்களை கையகப்படுத்தல், அதற்காக நிலங் களை அளவீடுதல் உள்ளிட்ட நடவ டிக்கைகளில் அரசு அதிகாரிகள் ஈடு பட்டு வருகின்றனர். இதற்கெதிராக ஆங் காங்கே கண்டன இயக்கங்கள் நடை பெற்று வருகின்றன. இந்நிலையில் மத்திய, மாநில அரசு கள் சேலம் - சென்னை இடையிலான எட்டு வழிச்சாலை திட்டத்தை தாமாக முன்வந்து கைவிட வேண்டும். ஏற் கனவே, சென்னை சென்று வர பயன் பாட்டியுள்ள மூன்று சாலைகளை விரிவு படுத்த வேண்டும் என வலியுறுத்தி திங்களன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாதிக்கப்பட்ட விவ சாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எட்டு வழிச் சாலை எதிர்ப்பு கூட்டமைப்பு நிர்வாகி சந்திரமோகன் தலைமை வகித்தார். இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் டி.ரவீந்தி ரன், செயலாளர் ஏ.ராமமூர்த்தி, தலைவர்  பொன்னுசாமி, சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஆர்.குழந்தைவேல்,  சிபிஐமாவட்டச் செயலாளர் ஏ.மோகன்,  திமுகதேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்  வீரபாண்டி எஸ்.ராஜா, இயக்குனர் வ. கௌதமன் உள்ளிட்ட எட்டு வழிச்சாலை எதிர்ப்புக் கூட்டமைப்பின் நிர்வாகிகள் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர்.  

தருமபுரி

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக் கத்தின் சார்பில் அரூர் வருவாய் கோட் டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட் டத் தலைவர் கே.என்.மல்லையன், மாவட்டச் செயலாளர் சோ.அருச்சு ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொருளாளர் பெருமாள், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட் டச் செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் எம்.மாரிமுத்து, எம்.முத்து, இரா.சிசுபாலன், ஒன்றிய செயலாளர்கள் ஆர்.மல்லிகா, பாப்பி ரெட்டிபட்டி சி.வஞ்சி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.