districts

img

எங்க கிட்ட மோதினால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்; பத்திரிகையாளர்களை மிரட்டிய பாஜக மாவட்ட செயலாளர்

பத்திரிகையாளர்கள் இனிமேல் ஜாக்கிரதையாக இருங்கள்.எங்க கிட்ட மோதினால் விளைவுகள் பயங்கரமாக என்று பாஜக மாவட்ட செயலாளர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக விவசாய அணி சார்பில் பொங்கல் தொகுப்பிற்கு தேங்காய் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து வியாழன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

 இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் சரவணன் பேசும்போது,

 பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை செய்தியாளர்கள்  கேள்விகளைக் கேட்டு ஏளனம் செய்து வருகின்றனர்.கடந்த வாரம் ஒரு சிறு வாட்சை வைத்து இழிவுபடுத்தியுள்ளனர். குறிப்பாக பிரபல தனியார் தொலைக்காட்சிகள் இரண்டின் பெயரை குறிப்பிட்டு "நீங்கள் செய்தி சேகரிக்கவே கூடாது" என எச்சரித்தார்.

பத்திரிகையாளர்கள் இனிமேல் ஜாக்கிரதையாக இருங்கள். எங்க கிட்ட மோதினால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என பத்திரிகையாளர்களை மிரட்டும் தொனியில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.