districts

img

அரசு சொகுசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – 20 பேர் படுகாயம்  

சேலத்தில் எதிர்பாராத விதமாக அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.  

சென்னையில் இருந்த அரசு சொகுசுப் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு திருப்பூரை நோக்கி சென்று கொண்டிருந்து. பேருந்து சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே இன்று அதிகாலை 4 மணிக்கு வந்த கொண்டிருந்த போது எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிட ஓட்டுனர் முயற்சித்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.  

இந்த விபத்து குறித்து அறிந்த வாழப்பாடி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேருந்துக்குள் சிக்கி தவித்த பயணிகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

இதுதொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், பேருந்தின் ஓட்டுனர் சீனிவாசன் மற்றும் நடத்துநர் செல்வராஜ் உட்பட 20 பேர் படுகாயமடைந்தனர். மேலும் 22 பேர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதனைதொடர்ந்து இந்த விபத்தைக்குறித்து வாழப்பாடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

;