districts

img

வாழப்பாடி அருகே அரசுப் பேருந்து, கவிழ்ந்து 30 பேர் படுகாயம்

 சேலம் வாழப்பாடி அருகே அரசுப் பேருந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 30 பேர் படுகாயம் அடைந்தனர்.

சேலம் மாவட்டம் , ஆத்தூரில் இருந்து சேலம் நோக்கி காலை அரசு விரைவுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரியகிருஷ்ணாபுரம் குடுவாற்று பாலம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து , சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்நிலையில் பேருந்தில் பயணித்த 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து வந்த கிராம மக்கள் பேருந்தில் சிக்கிக் கொண்ட பயணிகளை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து ஏத்தாப்பூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

;