districts

img

வாலிபர் சங்கத்தினர் விடுதலை

 

சேலத்தில் காவல்துறையினர் பதிந்த பொய்வழக்கில் இருந்து வாலிபர் சங்கத்தினர் அனைவரையும் விடுதலை செய்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

சேலம் மாநகரம் 5 ஆவது கோட்டம் பெரியபுதூர் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக நடுரோட்டில் அமைந்துள்ள மின்கம்பத்தை மாற்றிட வேண்டும். அதேபகுதியில் புதிய டிரான்ஸ்பாராம் அமைத்து மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த 10.07.2019 அன்று சொர்ணபுரி மின்வாரிய அலுவலகம் முன்பு வாலிபர் சங்கத்தினர் அமைதியான முறையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பின் மின்வாரிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டதால், போராட்டம் வெற்றியடைந்தது.  

இந்நிலையில், இப்போராட்டத்தில் ஈடுபட்ட வாலிபர் சங்கத்தினர் மீது பல்வேறு பிரிவுகளில் சேலம் மாநகர காவல்துறையினர் பொய்வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு சேலம் 5 ஆவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் வாலிபர் சங்கத்தினருக்காக வழக்கறிஞர்  எம்.வெற்றிவேல் ஆஜராகி வாதாடி வந்தார்.  

இந்நிலையில், காவல்துறையினரின் இந்த பொய் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வாலிபர் சங்க நிர்வாகிகள் அனைவரையும் விடுவித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதையடுத்து நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் வெற்றிவேல் மற்றும் வழக்கில் விடுதலையான வாலிபர் சங்க மாவட்ட செயலாளர்  வெங்கடேஷ், நிர்வாகிகள் கதிர்வேல், செந்தில்குமார், சசிக்குமார், கார்த்தி, மணிகண்டன், ஆஜித், பிரகாஷ் ஆகியோரை மார்க்சிஸ்ட் கட்சியின் வடக்கு மாநகர செயலாளர் என்.பிரவீன்குமார், வாலிபர் சங்க வடக்கு மாநகர செயலாளர் ஆர்.குருபிரசன்னா ஆகியோர் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர். 

;