சேலம், ஏப்.10- விகிதாச்சார அடிப்படையில் பதவி உயர்வு வழங்கக் கோரி ஏப்.27ல் போராட்டம் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் தெரிவித்துள் ளது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் சேலம் மாவட்ட அளவிலான கூட்டம் சங்கத்தின் மாவட்ட தலைவர் பி.ஜே.கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர்களுக்கு, ஓய்வூதியத் தொகையை நிலுவையின்றி உடனடியாக வழங்க வேண்டும். பதிவறை எழுத்தர், அலுவலக உதவியா ளர் உள்ளிட்டோருக்கு விகிதாச்சார அடிப்படையில் இள நிலை உதவியாளராக பதவி உயர்வு வழங்க வேண்டும். தற்காலிக பணி நீக்கத்தில் உள்ள ஊராட்சி செயலாளர் களுக்கு பிழைப்பூதியம் வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள குற்ற குறிப்புகளை இறுதி செய்தல் வேண்டும். அரசியல் மற்றும் உயர் அலுவலர்கள் நெருக்கடி காரண மாக ஒரு சார்பாக நடவடிக்கை எடுப்பதை தவிர்த்து, நடு நிலையோடு மாவட்ட நிர்வாகம் செயல்பட வேண்டும் என் பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஏப்ரல் 27-ஆம் தேதி மாவட்ட தலைநகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் படும் என முடிவு செய்யப்பட்டது. முன்னதாக, இக்கூட்டத் தில் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் திருவேரங்கன், மாநில செயற்குழு உறுப்பினர் கேசவன், மாவட்ட செயலா ளர் ஜான் ஆன்ஸ்டின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.