districts

img

சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்காதே அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சேலம், நவ. 24- சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்கக்கூ டாது என வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கத் தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். மத்திய பாஜக அரசு தொடர்ச்சியாக பொதுத் துறை நிறுவனங்களாக உள்ள ரயில்வே, பிஎஸ் என்எல், இன்சூரன்ஸ், கனி மம், உருக்கு ஆலைகள் உள்ளிட்டவை களை தனியாருக்கு விற்கும் முயற்சியில் ஈடு பட்டு வருகிறது.

மக்களின் பொதுச் சொத் தான இந்த துறைகளை பாதுகாக்க வலியு றுத்தியும், நவம்பர் 26 ஆம் தேதியன்று நடைபெறும் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் சேலம் உருக்காலை தொழிலா ளர்கள் அனைவரும் பங்கேற்க ஆதரவு தெரி வித்தும் சேலம் உருக்காலை பணிமனை முன்பு அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

இதில், சிஐடியு சாலைப் போக்குவரத்து மாநில துணைத் தலைவர் எஸ்.கே.தியாக ராஜன், சிஐடியு மாவட்டத் தலைவர் பி. பன்னீர்செல்வம்,  சிஐடியு உருக்காலை சங்க பொது செயலாளர் சுரேஷ்குமார், ஐஎன்டி யூசி நிர்வாகி வடமலை, தேவராஜன், எல்பிஎப் மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்ட அனைத்து சங்க நிர் வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

;