தமிழகத்தில் நீட் தேர்வு விலக்கு அளிக்க தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை திருப்பி அனுப்பிய ஆளுநரின் செயலை கண்டித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, தமிழக அரசின் சார்பில் சட்டமன்றத்தில் அனைத்து கட்சியினர் சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பாமல், அரசுக்கு திருப்பி அனுப்பிய செயலை கண்டித்தும், ஆளுநரை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட தலைவர் கே.பி.வி ராஜேஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பாரதி, மண்டல தலைவர் தினேஷ், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் பி. செங்கொடி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.