சேலம், நவ.26- போலி பட்டா வழங்கிய ஆதி திராவிடர் நல வட்டாட்சியர் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தி பாதிக்கப்பட்ட பட்டிய லின பொதுமக்கள் சிபிஎம் தலை மையில் ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளித்தனர்.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், தம்மம்பட்டி அருகே உள்ள பனந்தோப்பு பகுதியில் 30க்கும் மேற்பட்ட பட்டியலின குடும்பத்தி னர் வசித்து வருகின்றனர். குடியி ருக்க வீடு இல்லாத நிலையில், கடந்த 1998 ஆம் ஆண்டு தம்மம் பட்டி, 10 ஆவது வார்டிலுள்ள ஆறு முகம் என்பரின் மனைவி சின்னம் மாள், மகன்கள் சுப்பிரமணி, சொக்கலிங்கம் ஆகியோரின் ஒரு ஏக்கர் 80 சென்ட் நிலத்தை 30 குடும்பமும் சேர்ந்து, ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 500 ரூபாய்க்கு வாங்கி யுள்ளனர்.
மேற்கண்ட நிலத்தை அளந்து பட்டா கொடுக்கக்கோரி, ஆத்தூர் ஆதிதிராவிடர் வட்டாட் சியரிடம் மனு அளித்தனர். அதன டிப்படையில், கடந்த 2002 ஆம் ஆண்டு 30 குடும்பத்திற்கும் 5 சென்ட் வீதம் பட்டா வழங்கியுள் ளார். அந்த காலகட்டத்தில் கடுமை யான வறட்சி ஏற்பட்ட நிலையில், வாழ வழியின்றி வெளியூருக்கு பிழைப்புக்காக சென்றிருந்த நிலை யில், 20 பேரின் பட்டாவை ஆத்தூர் ஆதிதிராவிடர் வட்டாட்சியர் ரத்து செய்து விட்டு, வேறு 20 பேருக்கு பட்டா மாறுதல் செய்து கொடுத் துள்ளார்.
பணம் போட்டு வாங்கிய குடிமனை பகுதியில், வேறு ஒரு நபருக்கு பட்டா மாற்றம் செய்து கொடுத்தது தெரியாத நிலையில், வீட்டுமனையை தூய்மைப்படுத்தி தற்போது வீடு கட்டி குடியிருந்து வருகிறார்கள். இந்நிலையில், வருவாய்த் துறை சார்பில் சம்பந்தப்பட்ட இடத்தை நில அளவீடு செய்ய வேண்டும் எனவும், சம்பந்தப்பட்ட இடத்தை காலி செய்ய வேண்டும் எனவும் அதிகாரிகள் கூறி வருவ தால் பாதிக்கப்பட்ட மக்கள் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை யில் செவ்வாயன்று மாவட்ட ஆட்சி யரை சந்தித்து மனு அளித்தனர்.
அப்போது, ஆத்தூர் பகுதி யைச் சுற்றியுள்ள சில நில புரோக் கர்கள் துணையோடு, அரசு அதி காரிகள் கூட்டாக இரண்டு முறை பட்டா போட்டுள்ளதாகவும், போலி யாக ஆத்தூர் ஆதிதிராவிடர் நலத் துறை வட்டாட்சியர் பட்டா அளித் துள்ளதை கண்டித்தும், அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு முத்திரையை தவ றாக பயன்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும், என பாதிக்கப் பட்ட மக்கள் தெரிவித்தனர். இந்நி கழ்வில் சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஆர்.வெங்கடபதி, ஆத்தூர் தாலுகாச் செயலாளர் எ. முருகேசன், கெங்கவல்லி தாலு காச் செயலாளர் தமிழ்மணி ஆகி யோர் உடனிருந்தனர்.