எடப்பாடி அருகே 20 மூட்டை குட்காவை பறிமுதல் செய்தனர்.
சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே உள்ள பூலாம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பக்கநாடு கிராமம், அம்மன் கோவில் காடு, பகுதியில் தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் சனிக்கிழமையன்று அதிகாலை சுமார் 2 ஆம்னி வேனிலிருந்து சந்தேகப்படும் மூட்டைகள் இறக்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் விரைந்து சென்று பார்த்ததில் கட்டிடம் பூட்டி இருந்தது, ஜலகண்டபுரத்தில் வசிக்கும் வீட்டின் உரிமையாளர் முத்துக்காளியை தொடர்பு கொண்டபோது அவர் வர மறுத்ததாக கூறப்படுகிறது,
இதனையடுத்து, எடப்பாடி காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், மற்றும் பக்கநாடு கிராம நிர்வாக அலுவலர் ஆகியோருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் முன்னிலையில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அங்கு சட்டவிரோதமாக பதுக்கப்பட்டிருந்த சுமார் இரண்டரை லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து 20 மூட்டைகளில் இருந்த குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும், இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.