சென்னை, மே 17-
வாட்ஸ் ஆப் மூலம் டிக்கெட் எடுக்கும் வசதியை சென்னை மெட்ரோ அறிமு கம் செய்துள்ளது.
சென்னையில் போக்கு வரத்து நெரிசலை குறைக் கும் வகையில் பல்வேறு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படு கின்றன. முதலில் இந்த மெட்ரோ ரயில் சேவைக்கு பொதுமக்கள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லை. ஆனால் தற்போது மக்களின் முதன்மையான போக்கு வரத்து முறைகளில் ஒன்றாக மெட்ரோ ரயில் சேவை மாறி வருகிறது. இதனால் சென்னை மெட்ரோ நிறுவ னம் தனது சேவையை விரிவு படுத்தும் பணியிலும் ஈடுபட்டு வருகிறது.
சென்னையில் அலுவல கம் செல்வோர், கல்லூரி மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் என தினசரி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்கின்றனர். நாளுக்கு நாள் மெட்ரோ ரயிலில் பய ணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சென்னை மெட்ரோ நிறுவனம், பயணிகளை ஈர்க்கும் வகையில் பயணி கள் அட்டை திட்டம் மூலம் டிக்கெட் பெற்றால் 20 விழுக் காடு சலுகை, மாத பயணச் சீட்டு ரூ.2,500,மற்றும் 20க்கு மேற்பட்டோர் பயணித்தால் குரூப் டிக்கெட் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது.
இந்நிலையில் வாட்ஸ் அப் மூலம் டிக்கெட் எடுக் கும் வசதியை மெட்ரோ நிறுவன நிர்வாக இயக்குநர் எம்.ஏ.சித்திக் சென்னை திருமங்கலம் மெட்ரோ நிலையத்தில் புதனன்று (மே 17) அறிமுகம் செய்தார். இதில் இயக்குநர் கள் ராஜேஷ் சதுர்வேதி (அமைப்பு இயக்கம்), அர்ஜுனன் (திட்டம்), தொலைதொடர்பு ஆலோ சகர் கே.ஏ.மனோகரன் (சிக்னல்), கரிக்ஸ் மொபைல் நிறுவன உதவி இயக்குநர் அலி ஈஷர் பின்னர் இதுகுறித்து மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறுகையில்,
மெட்ரோ ரயில் நிலையங்களில் வாட்ஸ் ஆப் எண் மற்றும் கியுஆர் கோடு வைக்கப் பட்டுள்ளது. அந்த எண் ணுக்கு புறப்படும் இடம் மற்றும் சேருமிடத்தை பயணிகள் அனுப்பினால், பின் பணம் செலுத்தும் பக் கத்திற்கு செல்லும். பயணி கள் யுபிஐ சேவை உள்ளிட்ட பல வழிகளில் பணம் செலுத் தலாம். பின்னர் பயண டிக்கெட் கியுஆர் கோடு வாட்ஸ் ஆப் எண்ணிற்கு அனுப்பப்படும், அதை பயன்படுத்தி பயணித்துக் கொள்ளலாம் என்று தெரி வித்தனர்.
மேலும் கைபேசி மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட்டு கள் பதிவு செய்தால் 20 விழுக்காடு தள்ளுபடி அளிக்கப்படும் எனவும் மெட்ரோ நிறுவனம் அறிவித் துள்ளது.