districts

img

தியாகி.தில்லையாடி வள்ளியம்மை 108 ஆவது நினைவு தினம் கடைப்பிடிப்பு

மயிலாடுதுறை, பிப்.23 - மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அரு கேயுள்ள தில்லையாடியில் தியாகி.தில்லையாடி வள்ளியம்மையின் 108  ஆவது நினைவு தினம்  செவ்வாயன்று கடைப்பிடிக் கப்பட்டது. அங்குள்ள  நினைவு மண்டபத்திலுள்ள வள்ளியம்மையின் சிலைக்கு  மயிலாடுதுறை மாவட்ட வரு வாய் அலுவலர் சோ.முருக தாஸ், வட்டாட்சியர் ஹரி தரன், வட்டார வளர்ச்சி அலு வலர் மஞ்சுளா, மாவட்ட மக்கள் தொடர்பு உதவி  அலுவலர் அஸ்வின்குமார், ஊராட்சி தலைவர் ரெங்க ராஜ், துணைத்தலைவர் அனுசுயா சஞ்சய்காந்தி, ஊராட்சி உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள்  மாலை அணிவித்து மரி யாதை செய்தனர்.  பின்னர் மணிமண்ட பத்தில் பாதுகாக்கப்பட்டு  வரும் தென்னாப்பிரிக்கா வில் நிறவெறிக்கு எதிராக  காந்தியடிகள் நடத்திய போராட்டம் குறித்த ஓவியங் களையும், போராட்டத்தில் பங்கேற்ற தில்லையாடியை சேர்ந்தவர்களின் புகைப் படங்களையும், காந்தி தமி ழில் எழுதிய கடிதங்களையும் பார்வையிட்டனர். இந்நிகழ்ச் சியில் கிராம பொது நலச்சங் கத்தின் முன்னாள் தலைவர் ஜெகதீசன் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.