districts

மறைமலை நகரில் இளைஞர் வெட்டிக் கொலை

வண்டலூர்,மே 23- 

    மறைமலைநகரை அடுத்த அனுமந்த புரம் பகுதியை சேர்ந்த வரதனின் மகன் மனோகரன் (32). இவர் தனது சகோதரர்க ளோடு சேர்ந்து சொந்தமாக ஜேசிபி எந்திரங்களை வைத்து தொழில் செய்து வந்தார்.

      இந்த நிலையில் திங்களன்று இரவு, மனோகரன் மறைமலைநகர் பகுதி யில் இருந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார்.  கொண்டமங்களம் ஊராட்சி அலு வலகத்தை கடந்தபோது அங்கு 2 மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மனோகரனை வழி மறித்து வெட்டிக்கொன்றனர். இதுகுறித்து மறைமலைநகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.