districts

img

ஒன்றிய பாஜக அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

ஒன்றிய பாஜக அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் இணைந்து வியாழனன்று (அக் 27) பெரியபாளையம் பஜாரில் ஆர்ப்பாட்டம் நடத்தின. மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.ஸ்வேதா தலைமையில் மாவட்ட செயலாளர் ஆ.டிக்சன், வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.கலையரசன், செயலாளர் டி.மதன் உட்பட பலர் பேசினர்.


ஒன்றிய அரசின் இந்தி திணிப்புக்கு எதிராக செங்கல்பட்டு ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்க  மாவட்டத் தலைவர் ஆர்.சதீஷ் தலைமை தாங்கினார். மாநில துணைச் செயலாளர். பிரியங்கா, மாவட்டச்செயலாளர் ஜீவானந்தம், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் தமிழ்பாரதி, உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.