விழுப்புரம், நவ.19- ஏரி ஆக்கிரமிப்பு அகற்ற வலியுறுத்தி திண்டிவனம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், விட்டலாபுரம் கிராமம் ஏரியில் ஆக்கிரமிப்பு அதிகரித்துவிட்டது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி பொதுப்பணித்துறை பொறியாளரிடம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மனு அளித்தனர். சங்கத்தின் முன்னாள் மாவட்டத் தலைவர் ஏ.கண்ணதாசன், திண்டிவனம் வட்டத் தலைவர் எஸ்.பார்த்திபன், செயலாளர் ஏ.ம.சதீஷ் குமார், சிவக்குமார், ஐ.வெங்கடேசன், விட்டாலபுரம் கிளைத் தலைவர் தீபக், செயலாளர் திரு முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.