districts

img

கலைத்துறையில் இளைஞர்களை ஊக்கப்படுத்த கலைப்போட்டி

சென்னை,மே 15- குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம்  மற்றும் ஓவியம் ஆகிய 5 பிரிவுகளில் சென்னை மாவட்ட அளவிலான போட்டிகள் ஞாயிறன்று (மே 15)  நடைபெற்றது.  தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி யில் நடைபெற்ற குரலிசைப்போட்டி யில் முதல் பரிசை ஸ்ரீ ஸ்வராத்மிகா,  இரண்டாம் பரிசை வி. முகுந்த சாய், மூன்றாம் பரிசை   நா.ரித்திக்கேஷ்வர் ஆகியோர் பெற்ற னர்.   கருவியிசை போட்டியில் முதல் பரிசை பி. வெண்ணிலா (வயலின்), இரண்டாம் பரிசை கா. கார்த்திக் பாலாஜி (மிருதங்கம்), மூன்றாம் பரிசை    கி.லவ் அய்யங்கார் (புல்லாங் குழல்), பரதநாட்டியம் போட்டியில்  முதல் பரிசை எஸ். சஹானா, இரண்டாம் பரிசை ப. கிருஷ்ணப்பரியா, மூன்றாம் பரிசை பி. ஸ்ருதி, கிராமிய கலைப் போட்டியில் முதலாம் பரிசை நா. ராஜன் (கரகம் தப்பாட்டம்) இரண்டாம்  பரிசை சு.வி. ரமணன் (கரகம்) மூன்றாம்  பரிசை  அ. தமிழ்செல்வன் (பறை) ஆகி யோர் பெற்றனர்.

ஓவியப்போட்டி
கவின் கலைக்கல்லூரியில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் முத லாம் பரிசை கு. பவித்ரா, இரண்டாம் பரிசை சி. கார்திக்ராஜா, மூன்றாம் பரிசை  ப.ஷாரணி ஆகியோர் பெற்றனர்.  இப்போட்டியில் வெற்றி பெற்றவர்க ளுக்கு முதல் பரிசுத்தொகையாக ரூ. 6000, இரண்டாம் பரிசுத்தொகையாக ரூ. 4500, மூன்றாம் பரிசுத்தொகையாக ரூ. 3500 வழங்கப்படுகிறது. இப்போட்டி யில் முதலிடம் பெற்ற ஐந்து  இளைஞர்கள் மாநில கலைப் போட்டிக் குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

;