திருப்போரூர், மார்ச்16- திருப்போரூர் அருகே செவ்வாயன்று தொழிலாளர்களை தாக்கி ரூ.20ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. திருப்போரூர்-மாமல்லபுரம் சாலையில் உள்ள தண்டலம் பகுதியில் கடைகள் கட்டுமானப்பணி நடைபெற்று வருகிறது. இதில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 5 பேர் அங்கேயே தங்கி வேலை செய்து வருகின்றனர். செவ்வாயன்று இரவு தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்களிடம் 4 பேர் கொண்ட கும்பல் இரும்பு கம்பியால் தாக்கி ரூ.20 ஆயிரம், ஒரு செல்போனை கொள்ளையடித்துள்ளனர். கொள்ளையர்கள் தாக்கியதில் பிரேம் (வயது 30) என்ற கட்டுமான தொழிலாளியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து திருப்போரூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.