districts

சாலை விபத்தில் தொழிலாளி பலி

திருவண்ணாமலை, ஜுன் 10- திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுகா சின்ன காப்பலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாகரன் (56) கூலித் தொழிலாளி.  இவர் புதன்கிழமை மாலை அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்ப வர் மோட்டார் சைக்கிளில் திருவண்ணாமலையில் இருந்து தனது ஊருக்கு புறப்பட்டு சென்றார் . அவர்கள் வேலூர் சாலையில் சீல பந்தல் ஜங்ஷன் வழியே செல்லும்  போது முன்னே சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது கருணாகரன் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் கருணாகரன் கீழே விழுந்தார் .அப்போது அவர்கள் முந்த  முயன்ற லாரியின் சக்கரம் கீழே விழுந்த கருணாகரன் மீது ஏறி இறங்கி யது. இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவண்ணா மலை தாலுகா காவல் துறையினர் கருணாகரன் உடலை மீட்டு பிரேத  பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

;