திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட கோலடி ஏரியை ஆக்கிரமித்ததாக கூறி 27 வீடுகளை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் வருவாய்த்துறையினர் கடந்த மாதம் இடித்து அகற்றினர். தொடர்ந்து கோலடி ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 1,263 வீடுகளை 21 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என குடியிருப்போருக்கு நோட்டீஸ் வழங்கினர். இதனால் மனம் உடைந்த சங்கர் என்பவர் தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.