districts

ரெட்டேரியில் கொள்ளளவை அதிகரிக்கும் பணி அடுத்த மாதம் தொடக்கம்

சென்னை, ஜூலை 20- 

      சென்னையின் வளர்ந்து வரும் தேவை களை சமாளிக்க குடிநீர் விநியோகத்தை அதிகரிக்க முயற்சிகளின் ஒரு பகுதியாக, நீர்வளத்துறை ஆகஸ்ட் மாதம் ரெட்டேரி ஏரியில் சேமிப்பு திறனை அதிகரிக்கும் திட்டத்தை தொடங்கும் என்று அறிவித்துள்ளது.

    சென்னையில் நீர் நிலைகளை சீரமைக் கும் பணிகளை சென்னை மாநகராட்சி, நீர்வளத்துறை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் உள்ள 10 ஏரிகள் சீரமைக்க சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் முடிவு செய்துள்ளது.

   அதன்படி ஏரிக்கரை மேம்பாடு என்ற பெயரில் புதிய திட்டத்தில் ரூ. 100 கோடியில் ஏரிகளை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பெரும்பாக்கம் ஏரி, ரெட்டேரி, முடிச்சூர் ஏரி, மாடம்பாக்கம் ஏரி, செம்பாக்கம் ஏரி, வேளச்சேரி ஏரி, ஆதம்பாக்கம் ஏரி, அயனம்பாக்கம் ஏரி, கொளத்தூர் ஏரி, புழல் ஏரி ஆகிய 10 ஏரிகளை சீரமைக்க சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் முடிவு செய்துள்ளது.

   முதல் கட்டமாக சென்னையில் உள்ள இரட்டை ஏரிகளை சீரமைக்க தமிழ்நாடு நீர்வளத்துறை டெண்டர் விடப்பட்டு, ஆகஸ்ட் மாதத்திற்குள் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த  இரட்டை நீர்நிலைகளில் மாதவரம் நுழைவு  வாய்க்கால் மற்றும் மணலி ஏரி ஆகியவை அடங்கும், மேலும் சீரமைப்பு பணிக்கு ரூ.43.19 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. ஏரி யின் ஒரு பகுதியில் 40 சட்டவிரோத கட்டிடங்கள் ஆக்கிரமித்துள்ளன, அவற்றை  முதலில் அகற்றவேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த ரெட்டேரி ஏரி சுமார் 280 எக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கிறது. இந்த ஏரியில் 133 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். தண்ணீரை சுத்திகரித்து அனுப்ப கொளத்தூரில் சுத்தி கரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.  தினசரி 10 மில்லியன் லிட்டர் தண்ணீரை சுத்தி கரிக்கும் வகையில் இது அமைய உள்ளது. இதற்காக ரெட்டேரி ஏரியில் இருந்து சுத்தி கரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு வர 1.8 கி.மீ. தூரத்துக்கு குழாய்கள் பதிக்கப் பட்டுள்ளன.

    மேலும் ஏரியின் மேற்குப் பகுதியில் 3 கி.மீ.  தூரத்துக்கு தடுப்பு சுவர் அமைத்து, குப்பை கொட்டுவதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பதுடன் கிழக்கு நோக்கி  தூண்கள் நிறுவப்பட்டு வேலி அமைக்கப் பட்டுள்ளது.  

    இரட்டை நீர் நிலைகளில் நீர் மட்டம் தற்போது 32 மில்லியன் கன அடியாக உள்ளது. அதை 45.13 கன அடியாக அதி கரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் லிட்டர் தண்ணீர் இரட்டை ஏரிகளில் இருந்து மெட்ரோ வாட்டர் மூலம் கொளத்தூர் ஆலைக்கு பம்ப் செய்யப்பட்டு, அங்கி ருந்து ஏரிக்கு அருகில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்படவுள்ளது.

   ஆனால் ஏரியில் சட்டவிரோத ஆக்கிர மிப்புகள் மற்றும் குப்பைகள் கொட்டப்படு வதால் அது இன்னும் முழுமையாக நடை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.