அனல் மின் நிலையம் மற்றும் நீர் மின் உற்பத்தி மின் நிலையங்களில் பணிபுரிந்து வந்த ஒப்பந்த தொழிலாளர்கள் 8 ஆயிரம் பேர் 1999ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி நிரந்தரம் செய்யப்பட்டனர். மின் தொழிலாளர் நிரந்தரம் செய்யப்பட்டு 25 ஆண்டுகள் ஆனதையொட்டி மணலி துணை மின் நிலையத்தில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இதில் கே.வெங்கடையா, சென்னை வடக்கு பொருளாளர் சத்தியமூர்த்தி, மதன் கோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.