districts

வடகிழக்கு பருவமழையை சமாளிக்குமா விழுப்புரம் மாவட்டம்?

விழுப்புரம், அக். 12- விழுப்புரம் மாவட்டத்தில் வட கிழக்கு பருவமழையை சமாளிக்க மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் கைகொடுக்குமா? என பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக மாவட்ட ஆட்சியர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசின் அனைத்துத்துறை அதிகாரி களுடன் ஆலொசனைக் கூட்டம் நடத்தி பருவமழையினால் பொது மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதவாறு இருக்க தேவை யான முன்னெச்சரிக்கை நடவடிக் கைகளை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழைபோது மாவட்டத்தின் பல்வேறு தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி, வெள்ளக்காடாக மாறி விடுகிறது. குறிப்பாக விழுப்புரம் நகரின் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்து மக்கள் வெளியே வர முடியாத நிலை ஏற்படும். அதே  போல் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் முழுவதும் தண்ணீர் தேங்கி ஏரிபோல் காட்சியளிக்கும். வடகிழக்கு பருவமழை தொடங்கி னாலே மக்கள் அச்சப்படும் நிலை உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் திடீர் மழைக்கே தாக்குபிடிக்காத வகை  யில் விழுப்புரம் நகரம் உள்ளது. பல குடியிருப்பு பகுதிகளிலும், தாழ்வாக உள்ள சாலைகளிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. கடந்த வடகிழக்கு பருவ  மழையின் போது மக்கள் கடும் அவதிப்பட்டனர். பாலம் அமைக்கும் பணிக்காக கோலிய னூரான் வாய்க்காலின் இருபுற மும் வாய்க்கால் அடைக்கப் பட்டுள்ளதால் தற்போது மழைநீர் அந்த வாய்க்கால் வழியாகச் செல்ல முடியாத நிலை உள்ளது.

பருவமழை தொடங்குவதற்கு முன்பு அந்த பணிகளை விரைந்து முடிக்காவிட்டால் பருவ மழை யின்போது விழுப்புரம் நகரம் வெள்ளக்காடாக மாறிவிடும் என பொதுமக்கள் அச்சம் தெரி விக்கின்றனர். நகராட்சியில் புதி தாக இணைக்கப்பட்ட 5 கிராம ஊராட்சிகளான காகுப்பம், பானா ம்பட்டு, எருமனந்தாங்கல், வழுதரெட்டி, சாலாமேடு ஆகிய பகுதிகளில் உள்ள 17 வார்டுகளில் பாதாள சாக்கடை தொட்டி மற்றும் கழிவுநீர் குழாய் பதிக்கும் பணி களுக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் முறையாக மூடாமலும், சாலை மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததாலும் சமீபத்தில் பெய்த மழையில் அங்குள்ள சாலைகள் குண்டும் குழியுமாக மாறிவிட்டன. தற்போது நடைபெற்று வரும் கால்வாய் மற்றும் பாலப் பணி கள் மந்தமாக நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் வடிகால்வாய், பாலம் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட நிர்வாகம் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.