districts

நிலத்தை இழந்த சிறுதாவூர் மக்களுக்கு நீதி கிடைக்குமா? - இ.சங்கர்

தமிழ்நாட்டில், 1967-ல்  முதல்வராக இருந்த அண்ணாதுரை அவர்கள்  நிலமற்ற விவசாய தொழிலாளர் களுக்கு நிலம் வழங்கும் திட்டத்தின்  கீழ்,  ஒன்றுபட்ட காஞ்சிபுரம் மாவட்டம்,  திருப்போரூர் வட்டத்தில் உள்ள சிறுதா வூரில் 20 குடும்பங்களுக்கு தலா 2.50 ஏக்கர் விவசாய நிலம் வழங்கினார். மேலும் வீடுகள் கட்டிக் கொள்ள  10 செண்ட் மற்றும் பொது பயன்பாட்டிற் காக ஒரு ஏக்கர் என, புல எண்கள்  365, 366, 370, 373 தொடங்கி 390  வரையில் உள்ள நிலங்கள் முழுமை யாக 53 ஏக்கர் நிலம் இலவசமாக வழங்கினார். நிலம் பெற்ற பயனாளி களின் 19 குடும்பங்கள் பட்டியலின குடும்பங்கள். ஒரு குடும்பம் மட்டும் இஸ்லாமிய குடும்பம். மாநில அரசு வழங்கிய நிலத்தை பண்படுத்தி 25 ஆண்டுகளுக்கும் மேலாக சாகுபடி செய்து வாழ்க்கையை  நகர்த்தி வந்தனர். அந்த மக்களின் விவசாய சாகுபடிக்காக உழவு மாடு கள், உழவு கருவிகள் வாங்கவும், கிணறு தோண்டவும் அரசு நிதி உதவி  வழங்கி வந்தது. சாகுபடி செய்ததற் கான ஆதாரம் 1988 ஆம் ஆண்டு வரை  வருவாய் துறை அடங்கலில் பதிவாகி யுள்ளது. அத்துடன், தமிழ்நாடு அரசின் சிறு-குறு விவசாயிகள் அட்டையும் பெற்று பயனடைந்துள்ளனர். அரசு வழங்கிய விவசாய நிலம் தாழ்வான பகுதியில் இருந்ததால் மழைக்காலங்களில் பெருமளவு நீர் தேங்கி விடுவதால் ஒரு போக சாகுபடி மட்டுமே செய்து வந்துள்ளனர்.

தில்லு முல்லு கும்பல்!

இத்தகைய பின்னணியில் 1990க்கு பிறகு, கடன் தருவதாக கூறிய ஒரு கும்பல் திருப்போரூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது. எழுதப் படிக்கத் தெரியாத பட்டியலின மக்களின் அறியாமையை பயன்படுத்தி  பல்வேறு ஆவணங்களில் கையொப் பம் பெற்றுள்ளது அந்த கும்பல். அதன்  தொடர்ச்சியாக, 1992 ஆம் ஆண்டுக்குப்  பிறகு, நிலங்களில் இருந்து வலுக் கட்டாயமாக வெளியேற்றியது.  அதற்கு காரணம், பழைய மாமல்ல புரம் சாலையில் உள்ள சொகுசு  பங்களாவில் அன்றைய தமிழக முதல் வர் ஜெயலலிதா தங்கியிருந்தார்.

கள ஆய்வும் - ஆணையம் அமைப்பும்

நிலத்தை இழந்து பரிதவித்து கொண்டிருந்த அந்த மக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை அணுகினர். அதன் பிறகு, சம்பந்தப் பட்ட பகுதிக்கு சென்று கள ஆய்வு களை மேற்கொண்ட போது முறை கேடான பத்திரப்பதிவு, பட்டா மாற்றம் செய்திருப்பதும் ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தனர். நிலத்தை இழந்து நிர்கதியாக நின்ற மக்களுக்கு மீண்டும் நிலம் கிடைக்க முயற்சிகளை தொடங்கியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.  அன்றைய சிபிஎம் மாநிலச் செயலா ளர் என். வரதராஜன் தலைமையில் 26.7.2006 அன்று, முதலமைச்சர் கருணாநிதியை நிலமிழந்த மக்களுடன் சந்தித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட கலைஞர், அடுத்த நாளே நீதியரசர் கே.பி. சிவசுப்பிரமணியம் தலைமையில் விசாரணை ஆணை யத்தை அமைத்தார். விசாரணையை துவக்கிய ஆணை யம், நிலத்தை இழந்த விவசாயிகள் சார்பில் 25 சாட்சியங்கள், ஆணை யத்தின் சார்பாக 11 சாட்சியங்கள், எதிர்  மனுதாரர் சார்பில் ஒரு சாட்சியம் என 37 பேரிடம் விசாரணை நடத்தியது.  அப்போது, நிலம் இழந்த விவசாயிகள் சார்பாக 54 ஆவணங்களும், ஆணை யத்தின் சார்பில் 38 ஆவணங்களும், எதிர் மனுதாரர் சார்பில் 187 ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது. அதன் பிறகு, 2010 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 அன்று சிவசுப்பிரமணியம் ஆணையம் தனது பரிந்துரையை அரசுக்கு சமர்ப்பித்தது. அந்த அறிக்கை மார்ச் மாதம் 15 ஆம் தேதி  சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப் பட்டது. அதில், நிலமற்ற ஏழைகளுக்கு வழங்கப்பட்ட நிலத்தை மீண்டும் அரசாங்கமே எடுத்துக் கொள்ள வேண்டும். சொகுசு பங்களா வளா கத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட 34 ஏக்கர்  நிலத்தை மீட்டு, சிறுதாவூர் கிராமத் தைச் சேர்ந்த பட்டியலின மக்கள் மற்றும் நிலமற்ற ஏழைகளுக்கு பகிர்ந்து  அளிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தது. இந்த பிரச்சனையை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்த பாதிக்கப் பட்ட 20 குடும்பங்களைச் சார்ந்த வாரிசுதாரர்களிடம் நிலத்தை ஒப்படைப் பதற்கு மாறாக, விசாரணை ஆணை யம் பரிந்துரை செய்ததை மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்த்தது. அப்போதே முதலமைச் சருக்கு கடிதம் எழுதியது. இதற்கிடையில், விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டதை எதிர்த்து பரணி ரிசார்ட் இயக்கு நர்களில் ஒருவரான சித்ரா உச்ச நீதி மன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அவர் சசிகலா, ெஜ.இளவரசி யின் உறவினர். இந்த வழக்கு நிலு வையில் இருந்ததால் ஆணையத்தின் பரிந்துரைகள்  இறுதி தீர்ப்பு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப் பட்டது.

விஸ்வரூபம்!

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூலையில் ஓஎம்ஆர் ஸ்ரீ சிட்டி என்ற பெயரில் the madras city co-operative building society ltd   என்ற அமைப்பு, நிலமற்ற ஏழை களுக்கு வழங்கப்பட்ட அந்த நிலத்தில் பெரும்பகுதியை ஆக்கிர மிப்பு செய்து நில விற்பனை செய்யும்  நோக்கத்துடன் சட்டவிரோத நடவடிக் கையில் ஈடுபட்டது.இந்த ஆக்கிர மிப்பை அகற்றிட  செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்தது. அதன் தொடர் நடவடிக்கையாக, சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று ஆக்கிரமிப்பு நடவடிக்கை தடுத் திருக்கும் வட்டாட்சியர், பாதிக்கப்பட்ட மக்களிடம் ஆவணங்களை சமர்ப்பிக்க  உத்தரவிட்டார். அதற்கான ஆவணங் களை திரட்ட சென்றபோது, கிணறு வெட்ட போக பூகம்பம் ஏற்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சித்ரா மரணமடைந்ததை தொடர்ந்து, இளவரசி தாக்கல் செய்த  மேல்முறையீட்டு மனு உட்பட அனைத்து மனுக்களையும் 2014 ஆம்  ஆண்டு ஜூலை 4ஆம் தேதி தள்ளுபடி செய்து முடித்து வைத்துள்ளது  நீதி மன்றம். அன்றைக்கு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா. சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை  பெற்றதால் அவரது மறைவுக்குப் பிறகு  இடைக்காலமாக ஓ. பன்னீர்செல்வம் இரண்டு முறையும் அவரைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியும் மாறி, மாறி ஏழாண்டு காலம் முதல மைச்சராக இருந்து விசாரணை ஆணை யம் வழங்கிய பரிந்துரையை அமல்படுத்தாமல் இருந்தனர். தமிழ்நாட்டில் அண்ணாவால் வழங்கப்பட்ட நிலம் சில கும்பலால் அபகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக ஆட்சிக்காலத்தில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஏற்கெனவே அபகரிக்கப்பட்ட 53 ஏக்கர், சொகுசு பங்களா வளாகத்தில் வளைத்துப் போடப்பட்ட அரசு புறம்போக்கு நிலம் 34 ஏக்கர் என  ஒட்டுமொத்தமாக 87 ஏக்கர் நிலத்தை யும் கையகப்படுத்தி நில ஆவணங் களில் பெயர் மற்றும் நில வகை மாற்றம்  செய்து நிர்க்கதியாக நிற்கும் அந்த  குடும்பங்களுக்கு நிலத்தை வழங்கு வதே நீதியாகும்.