சென்னை,ஏப்.24- கலைஞர் கொடுத்த அர சாணையை செயல்படுத்த சுகாதாரத்துறை மானியக் கோரிக்கையின் போது முதலமைச்சர் அறிவிக்க வேண்டும் என்று அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக்குழு வலியுறுத்தியிருக்கிறது. இதுகுறித்து தலைவர் மருத்துவர் எஸ். பெருமாள் பிள்ளை விடுத்திருக்கும் அறிக்கை வருமாறு:- சுகாதாரத் துறையில் தமிழகம் முன்னணி மாநில மாக திகழ்கிறது. இருப்பி னும் அதற்கான பங்க ளிப்பை வழங்கி வரும் அரசு மருத்துவர்களுக்கு, நாட்டிலேயே மிகவும் குறைவான ஊதியம் தரப்படுகிறது. இரண்டு ஆண்டுக ளுக்கும் மேலாக, கொ ரோனா பேரிடரில் ஓய்வின்றி பணியாற்றி வரும் அரசு மருத்துவர்களின் வலிகளையும், உணர்வு களையும் அரசு புரிந்து கொள்ள மறுப்பது வேதனை யாக உள்ளது. கொரோனாவால் உயிரிழந்த அரசு மருத்துவர் களின் குடும்பத்தினருக்கு அரசிடமிருந்து நிவாரணம் தரப்படவில்லை. திவ்யா விவேகானந்தன் முதல்வருக்கு வேண்டு கோள் விடுத்த பிறகும், கல்விக்கேற்ற அரசு வேலை தரப்படவில்லை. 2009 ஆம் ஆண்டு டாக்டர் கலைஞர் அர சாணை 354 ன் மூலம் அரசு மருத்துவர்களுக்கு காலம் சார்ந்த ஊதியம் கிடைத்திட வழி வகுத்தார். அந்த அரசாணை கடந்த அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டது. அடுத்து அமையும் திமுக ஆட்சியில், அரசாணை 354 ன்படி 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி யளித்தார். புதிய ஆட்சி அமைந்து ஓராண்டாகியும் ஊதியக் கோரிக்கை நிறைவேற்றப் படவில்லை. எனவே ஏப்.29 அன்று சட்டப்பேரவையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானியத்தின் போது, திவ்யா விவேகானந்தனுக்கு அவரது கல்வி தகுதிக்கேற்ற அரசு வேலை மற்றும் அரசு மருத்துவர்களுக்கு, 12 ஆண்டுகளில் ஊதியப்பட்டை நான்கு வழங்கப்படும் என்ற அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.