districts

img

ஆவடி வீட்டு வசதி வாரிய பூங்கா சீரமைக்கப்படுமா

சென்னை, ஆக. 17-

       ஆவடி மாநகராட்சி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் சுமார் 8,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். 2016 - 2017ஆம் நிதி ஆண்டில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு செக்டார் 2இல் ரூ63 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா அமைக்கப்பட்டது. இந்த பூங்காவை சிறுவர்கள், பெரியவர்கள், நடை பயிற்சி மேற்கொள்பவர்கள் என தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் முறையான பராமரிப்பின்றி பூங்காவில் உள்ள விளை யாட்டு உபகரணங்கள் உடைந்து காணப்படு கின்றன. மேலும் தற்போது பெய்த மழையில் பூங்கா குளம் போல் காட்சியளிக்கின்றன. இதனால் சிறுவர்கள் விளையாட முடி யாமல் அவதிப்படுகின்றனர். மேலும் நடைபாதையும் சேதமடைந்துள்ளதால் முதியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

     இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், சாலையை விட தாழ்வாக பூங்கா உள்ளதால் மழைக்காலங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் அதில் இருந்து துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. மாநகராட்சி நிர்வாகம் நடை பாதைகளை சீரமைக்க வேண்டும். புதிய விளையாட்டு உபகரணங்கள் அமைக்க வேண்டும். பூங்காவின் அருகில் தான் ஏரி உள்ளது. எனவே பூங்காவில் தண்ணீர் தேங்காமல் ஏரிக்கு செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.