districts

விசைப்படகுகாரர்கள் செய்யும் தவறை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்

ராமநாதபுரம்,ஜூன் 17-

      மீன்பிடி தடைக்காலம் முடியும் முன்னரே கடலுக்குச் செல்லும் விசைப்படகுகாரர்கள் ஆண்டுதோறும் செய்யும் தவறை மீன்வளத்துறை நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்? என்று சிஐடியு மீன்பிடி  தொழிற்சங்க கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

     இதுகுறித்து தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு (சிஐடியு) மாநில செயல் தலைவர் எம்.கருணா மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

    பாக்ஜலசந்தி கடல் பகுதியில்   ராமேஸ்வரம் முதல் நாகை மற்றும்   காரைக்கால் வரையிலான சுமார் 6 மாவட்டங்களைச் சேர்ந்த விசைப்படகு கள் ஆண்டு தோறும் மீன்பிடி தடை காலம் முடிந்து கடலுக்கு செல்வது  வழக்கம்.

    காலை 6 மணிக்கு மேல்தான்  என்ற அரசின் சட்ட ஒழுங்குமுறை யானது ஆண்டு தோறும் மீறப்படு கிறது. இந்த  ஆண்டாவது ஒழுங்கு படுத்த வேண்டும்  என்று சிஐடியு  கடல்  தொழிலாளர் சங்கம் சார்பில் கடந்த  ஜூன் 9 அன்று நடைபெற்ற ராமநாதபுரம்  மாவட்ட ஆட்சியரின்  மீனவர் குறை  தீர்க்கும் நாளில் வலியுறுத்தியிருந் தோம்.  

     மேலும் இது ராமநாதபுரம் மாவட்டத் தில் மட்டும் அமல்படுத்தினால் போதாது . பாக்ஜலசந்தி கடல்பகுதியின் இதர மாவட்டங்களிலும் அமல்படுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்தி யிருந்தோம். அதற்கு சம்மந்தப்பட்ட 6 மாவட்ட ஆட்சியர்களிடமும் ராம நாதபுரம் மாவட்ட ஆட்சியர் தொடர்பு கொண்டு பேசுவது அவசியம் என்பதையும் வலியுறுத்தியிருந்தோம்.

    தேவைப்பட்டால் தமிழ்நாடு அரசின்  தலைமை செயலாளர், மீன்வளத்துறை யின் அரசு செயலாளர்,  ஆணை யாளரின் கவனத்திற்கும் கொண்டு  சென்று நடவடிக்கை மேற்கொள்ள  வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந் தோம். அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை மேற் கொள்வதாக உறுதியும் அளித்திருந் தார்.  

    ஆனால் வழக்கம் போல் இது  போன்ற உத்தரவாதம் நிறைவேற்றப் படுவதற்கான எந்தவொரு ஆக்க பூர்வமான நடவடிக்கையையும் மாவட்ட ஆட்சியர் நிர்வாகமும் மாவட்ட மீன்வளத் துறை நிர்வாகமும் மேற்கொள்ளவில்லை என்பது தெரிகிறது.  

    பொதுவாக இது போன்ற  நடவடிக்கை மேற்கொள்வதானால் முதலில் ஐஸ் பிளாண்டுகளில் இருந்து  ஐஸ் கட்டிகள் அதிகாலை 1 மணிக்கு மேல்தான் விநியோகிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவு பிறப்பித் திருக்கப்பட்டிருக்க வேண்டும்.  

    ஆனால் அது போன்ற  உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படாததால் முன் கூட்டியே ஐஸ் கட்டிகளை விசைப் படகுதாரர்கள் வாங்கி ஐஸ் பெட்டி களில் சேமித்து (ஸ்டோரேஜ்) செய்து வைத்து விட்டனர். இதன் மூலம் வழக்கம் போல்  அரசின் சட்ட ஒழுங்குமுறையை மீறி வெள்ளியன்றே மாலை 4 மணிக்கு மேல்  கடலுக்கு செல்வதை உறுதி செய்து விட்டனர்.  

   எனவே நடைபெற உள்ள இந்த தவறுக்கு யார் காரணம் என்பதை அரசு  நிர்வாகங்கள் தெளிவுபடுத்த வேண்டும்.

   இதனால் ஏற்படவுள்ள பாதிப்புக்கு யார் பொறுப்பு என்பதை யும் தெளிவுபடுத்த வேண்டும்.  மீன்வளத்துறையின் மீன்பிடி அனுமதிச் சீட்டு கூட பெறாமல்  முன்கூட்டியே கடலுக்கு செல்வதால் அபரிமிதமாக கூடுதலாக  கிடைக்கும் இறால், கணவாய், நண்டு, அக்டோபஸ்  போன்ற ஏற்றுமதி மீன்  இனங்களை வழக்கம் போல் கடல்  உணவு ஏற்றுமதி செய்யும் நிறுவ னங்கள் தங்களுக்குள் சிண்டிகேட் அமைத்துக்கொண்டு மிக குறைவான விலைக்கு கொள்முதல் செய்யும்.

     மற்றொருபுறம் இந்த மீன் இனங்கள் பல படகுகளில் உள்ள பதப்படுத்தும் வசதி இன்மையால் பதம் குறைந்து வருவதும் ஏற்படும். இதனால் பலனடைவது ஏற்றுமதி நிறுவனங்கள் மட்டுமே. இந்த நிதர்சனமான உண்மை நிலை தெரிந்தும் இந்த தவறை  விசைப்படகு தரப்பினர் ஆண்டு தோறும்  செய்வ தும் அதை மீன்வளத்துறை நிர்வாகம் கண்டுகொள்ள மறுப்பதும் நியாயம் தானா?

   எனவே சம்மந்தப்பட்ட அரசு நிர்வா கங்கள் இப்போது நினைத்தால் கூட இந்த பாதிப்பில் இருந்து நம் மீனவர்களை பாதுகாக்க முடியும்.

   இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.