districts

சென்னை முக்கிய செய்திகள்

சென்னையில் எங்கு தண்ணீர் தேங்கினாலும்  ஒரு மணி நேரத்தில் அகற்றப்படுகிறது 

சென்னை, நவ. 4- சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தில் உள்ள ஒருங்கிணைந்த கட்டுப் பாட்டு மையத்தை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என் நேரு, அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் சனிக்கிழமை ஆய்வு செய்தனர்.  அதனைத் தொடர்ந்து திருவிக மண்ட லத்தில் உள்ள அங்காளம்மன் கோவில் தெரு,  ஸ்டீபன்சன் சாலை, ஓட்டேரி நல்லா கால்வாய் உள்ளிட்ட பகுதிகளை பார்வை யிட்டு ஆய்வு செய்தனர். முன்னதாக அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் கூறுகையில். கடந்த 2, 3 நாட்களாக  சென்னையில் 11 செ.மீ. மழை பெய்தும் 1 மணி நேரத்தில் மழைநீர் தேங்கிய உடன் அந்த பகுதியில் தண்ணீர் அகற்றப்பட்டது. சென்னையில் எந்த பகுதியிலும் தண்ணீர் தேங்காத அளவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும், அதிகாரிகளும் தீவிர களப்பணி ஆற்றி வருகின்றனர். சென்னை ஆலந்தூரில் 9 சென்டிமீட்டர் மழை அரை மணி நேரத்தில் பெய்துள்ளது. மழை பெய்து தேங்கிய தண்ணீர் ஒரு மணி  நேரத்தில் தானாகவே வடிந்தது. இதை விட  கூடுதலாக 20 செண்டி மீட்டர் மழை பெய்தா லும் ஒரு மணி நேரத்தில் அதை அகற்று வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அதிகாரிகள் எடுத்து வருகின்றனர். தண்ணீர் தேங்கினால் உடனடியாக அகற்றுவதற்கு மோட்டார் பம்புகள், மரம் விழுந்தால் அகற்றுவதற்கு பணியாளர்கள் என அனைத்து ஊழியர்களும் தயார் நிலையில் இருக்கின்றனர். மெட்ரோ வாட்டர்  பணியாளர்கள் மட்டும் 2 ஆயிரம் பேர் தயார் நிலையில் உள்ளனர். மேலும்,  சென்னையில் நடைபெற்று வரும் சாலை  பணிகள் அனைத்தும் மழையின் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்றார். அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், வடசென்னை போன்ற பகுதிகளில் காலை  6.30 மணியளவில் மழை பெய்த போது கால் முட்டி அளவிற்கு தண்ணீர் தேங்கி  இருந்தது. ஆனால் தற்போது அங்கு  இருந்த தண்ணீர் முற்றிலும் அகற்றப் பட்டுள்ளது. வடசென்னை பகுதிகளில் எங்கும் தண்ணீர் தேங்கும் நிலை இல்லை என்று அவர் கூறினார்.

பள்ளி சென்ற மாணவன் மாயம்

செங்கல்பட்டு, நவ.4- செங்கல்பட்டு மாவட்டம்,  செய்யூர் வட்டத்திற்குட்பட்ட தொண்டமநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் சஞ்சய் வயது 16.  இவர் அணைக்கட்டில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம்  31ம் தேதி வழக்கம் போல் பள்ளிக்கு சென்றவர் வீடு  திரும்பவில்லை. இது குறித்து மாணவனின் தந்தை மாரியப்பன் அணைக்கட்டு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து மாய மான மாணவனை காவலர் கள் தேடி வருகின்றனர்.

மதுராந்தகம் அருகே  காதலர்கள் தூக்கிட்டு தற்கொலை

மதுராந்தகம், நவ.4- விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கரிப்பாளையம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் குணசேகர். இவரது  மகன் அருண் (வயது 22).   இவர் கடந்த 6 வருடங்களாக மதுராந்தகத்தில் உள்ள ரீவைண்டிங் ஒர்க் ஷாப்பில் வேலை செய்து வருகிறார்.இவர் மதுராந்தகம் அருகே உள்ள புது மாப்பக்கத்தில் பிரகாஷ் என்பவர் வீட்டில் வாடகை எடுத்து தங்கி உள்ளார். மரக்காணம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணி இவரது மகள் ஜனனி (வயது 17).தனியார் கல்லூரியில் நர்சிங் படித்து முடித்து சென்னை தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணி செய்து வருகிறார் இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களது திருமணத்திற்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது. இதனால் அருண்,  ஜனனி ஆகிய இருவரும் அருண் வாடகை வீட்டில்  தூக்கிட்டு இறந்து கிடந்தனர். தகவல் அறிந்ததும் மதுராந்தகம் காவலர்கள் பிரேதத்தை கைப்பற்றி பிரேத  பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த தற்கொலை சம்பவம் குறித்து மதுராந்தகம் காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காரைக்கால் விவசாயிகளுக்கு ரூ.7,500 நிவாரணம்: அரசு அறிவிப்பு

புதுச்சேரி,நவ.4- பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப் பட்ட காரைக்கால் விவசாயி களுக்கு ஹெக்டேருக்கு ரூ.7,500 நிவாரணம் வழங் பப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இது குறித்து புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பு வருமாறு:- புதுவை மாநிலம், காரைக்கால் பகுதியில் 2022-23 ஆம் ஆண்டு பருவம் தவறிப் பெய்த கன மழை காரணமாக பாதிக்கப்பட்ட விவ சாயி களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று  முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவையில் அறி வித்தார். அதன்படி, நிவா ரணத் தொகை ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ. 7,500 மட்டும் வழங்குவதற்கான அரசாணை வெளியிடப் பட்டுள்ளது. இதன் மூலம் 3,850.78 ஹெக்டேருக்கு ரூ.2 கோடியே 88 லட்சத்து 80 ஆயிரத்து 850 ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் முதல் பாதிக்கப்பட்ட 5,176 விவ சாயிகளின் வங்கி கணக்கு களில் இது வரவு வைக்கப்படும். இவ்வாறு அவர் தெரி வித்துள்ளார்.

சென்னையில் தாட்கோ மூலம் திறன் பயிற்சி

விழுப்புரம்,நவ.4- தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது.  இதன் அடிப்படையில் தற்போது சென்னையில் உள்ள ஸ்மைல் ஸ்கில் இந்தியா பயிற்சி நிலையத்தின் மூலம் பெண்களுக்கு திறன்பேசி தொழில்நுட்பவியலாளர் மற்றும் உற்பத்தி ஊழியர் பயிற்சி ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் பயிற்சியினை தாட்கோ சார்பாக அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 10 ஆம் வகுப்பு படித்த 18 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சி 12 நாட்கள் நடைபெறும். மேலும் சென்னையில் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில் தங்கி படிக்கும் வசதியும் இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கப்பவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் இப்பயிற்சியினை பெற்றவர்கள் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இப்பயிற்சியில் வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு ஆரம்பகால மாத சம்பளம் ரூ.18 ஆயிரம் முதல் ரூ.18,500 வரை பெற வழிவகை செய்யப்படும். பயிற்சிக்கான தங்கும் விடுதி மற்றும் பயிற்சி கட்டணத்தை தாட்கோ வழங்கும்.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முற்றுகை போராட்டம் 

விழுப்புரம்,நவ.4- விழுப்புரம் அருகே ஆற்காடு கிராமத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டத்திற்குட்பட்ட ஆற்காடு கிராமம். இங்கு மக்களின் எதிர்ப்பையும் மீறி டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது.  இந்நிலையில், சனிக்கிழமை அன்று (நவ.4) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த ஆற்காடு கிராம மக்கள். டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அனைவரும் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

ஊழியர் தற்கொலை
கடலூர்,நவ.4- கடலூர் புதுப்பாளையத்தை சேர்ந்தவர் புஷ்பராஜ் மகன் அந்தோணி சகாயராஜ் (47). இவர் கடலூர் மாவட்ட கருவூல கணக்கு துறை அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதால், தனது குடும்பத்தை பிரிந்து கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தங்கி தினந்தோறும் வேலைக்கு சென்று வந்து கொண்டிருந்தார்.  இந்நிலையில், அவர் தூக்கு போட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த கடலூர் புதுநகர் காவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்று அந்தோணி சகாயராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

கருத்தரங்கம்
 ராணிப்பேட்டை, நவ. 4- பாலின வன்முறை அற்ற சமூகம் படைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெண்ணுரிமை பாதுகாப்பு கருத்தரங்கம் ராணிப்பேட்டை மாவட்டம், கலவை பேருந்து நிலையம் அருகில் தாலுகா செயலாளர் எஸ். கிட்டு தலைமையில் நடைபெற்றது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில இணைச் செயலாளர் எஸ்.டி. சங்கரி, சிபிஎம் மாவட்ட அமைப்பாளர் என். காசிநாதன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் டி. சந்திரன், பி.ரகுபதி ஆகியோர் உரையாற்றினர்.