districts

கால்வாய் பணி முடியாத இடங்களில் குழாய் மூலம் வெள்ள நீர் வெளியேற்றப்படும் ஆர்.ஜெயராமன் கேள்விக்கு மேயர் பதில்

சென்னை, அக். 28 - கால்வாய் பணி முடியாத இடங்களில் குழாய்கள் அமைத்து வெள்ளம் வெளி யேற்றப்படும் என்று மேயர் ஆர்.பிரியா தெரிவித்தார். மாநகராட்சி மன்றக்கூட்டத்தில் கேள்வி எழுப்பிய 4வது வார்டு உறுப்பினர் ஆர்.ெஜயராமன், எர்ணீஸ்வரர் கோவில் 4வது தெரு, பெருமாள் கோவில் தெருக் களில் மழைநீர் கால்வாய் பணிக்காக பள்ளம்  தோண்டி 6 மாதமாகிறது. பணிகள் முடியாத தால் தோண்டிய பள்ளத்தில் மழை தண்ணீரும், சாக்கடையும் தேங்கி துர்நாற்றம்  வீசுகிறது. அந்த தணணீர் வீடுகளுக் குள்ளும் சாலைகளிலும் வழிந்தோடுகிறது. ஒப்பந்ததாரர் (சிப்பம் 38) மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று கேட்டார். இதற்கு பதிலளித்த மேயர் ஆர்.பிரியா, எர்ணீஸ்வரர் கோவில் தெரு 160 மீட்டம் நீளம்  கொண்டது. இதில் 112 மீட்டர் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 48 மீட்டர் தூரம் கால்வாய் அமைக்க வேண்டி உள்ளது. 154 மீட்டர் கொண்ட பெருமாள் கோவில் தெருவில் 74 மீட்டருக்கு பணிகள் முடிக்கப் பட்டுள்ளன. மீதம் உள்ள 80 மீட்டர் தூரம்  கால்வாய் அமைக்க வேண்டும். இந்த இடங்களில் பள்ளம் தோண்ட குழாய், வீட்டின்  ற்றுச்சுவர்கள் தடையாக உள்ளது. பருவ மழை தொடங்க உள்ளதால் புதிதாக  பள்ளம் தோண்ட வேண்டும் என  அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தப்பகுதி களில் தேங்கும் வெள்ளம் குழாய்கள் மூலம்  வெளியேற்றப்படும். பருவமழைக்கு பிறகு  மீண்டும் பணிகள் தொடங்கப்படும் என்றார். துணைக்கேள்வி எழுப்பிய ஜெயரா மன், மேயர் குறிப்பிட்டுள்ளது போன்று குழாய்கள் அமைத்து வெள்ளம் வெளி யேற்றப்படவில்லை என்றார். அதற்கு பதில ளித்த ஆணையர் ககன்தீப் சிங் பேடி,  வடக்கு வட்டார ஆணையர் வாயிலாக  அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும் என்றார்.