districts

img

சுரண்டல் பிடியில் இருந்து விடியல் எப்போது? விசைத்தறித் தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் விசைத்தறித் தொழில் உள்ளது. 5 லட்சம் தொழிலா ளர்கள் இதில் வேலை செய்து வரு கின்றனர். குறிப்பாக, தமிழகத்தின் மேற்கு மாவட்டங்கள், சென்னைக்கு அருகில் உள்ள 4 மாவட்டங்கள் மற்றும் தேனி, தென்காசி, விருது நகர் மாவட்டங்களில் விசைத்தறி தொழில் அதிகளவில் நடைபெறுகிறது. ஜவுளி உற்பத்தியாளர்கள், தறி உரிமையாளர்கள் என்ற தன்மையில் உற்பத்தி முறை இருந்து வருகிறது. சார்பு தொழில்களில் சுமார் 2 லட்சம் பேர் உள்ளனர்.  தொழிலாளி காலம் காலமாக தினசரி 12 மணி நேரம் இரவு, பகல் என மாறி மாறி தறி ஓட்ட வேண்டும்.  பண்டிகை நாட்களில் கூட வேலை  செய்ய வேண்டும். ஞாயிறு விடுமுறை இல்லை. சில மாவட்டங்களில் அமா வாசை தினத்தில் தான் விடுமுறை உண்டு. ஒரு தொழிலாளி குறைந்த பட்சம் இரண்டு தறிகள் முதல், ரகங்களை பொறுத்து 14 தறிகள் வரை ஓட்டுகிறார்கள். 12 மணி நேர வேலைக்கு சம்பளம் ரூ.300 முதல் ரூ.400 வரைதான் கிடைக்கிறது. மற்ற தொழில்களில் உள்ள பஞ்சப்படி இல்லை. ஓவர்டைம் வேலைக்கு இரட்டிப்புச் சம்பளம் கிடையாது. இஎஸ்ஐ மருத்துவ வசதி மற்றும் பிஎப் வசதிகள் இல்லை. சட்ட சலுகைகள் எதுவும் இல்லாமல் காலம் காலமாய் சுரண்டப்பட்டு வருகிறார்கள்.  சம்பளம் மற்றும் போன்ஸ் மட்டுமே வழங்கப்படுகிறது.

சில மாவட்டங்களில் தீபாவளி போனஸ் கூட மறுக்கப்படுகிறது. நஷ்ட ஈடு, கிராஜுவிட்டி எனப்படும் பணிக் கொடை, ஓய்வூதியம் என்பதெல் லாம் கனவாகவே இருந்து வருகிறது. பண்டிகை விடுமுறை சம்பளம், கேசு வல் லீவு போன்றவை விசைத்தறித் தொழிலாளர்களுக்கு தெரியாத நிலைதான் உள்ளது. முன்பணம் என்ற நடைமுறை இந்த தொழிலில் சிலந்தி வலையாக உள்ளது. ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 1.50 லட்சம் வரை விசைத்தறி உரிமை யாளர்கள் தொழிலாளர்களுக்கு அட்வான்ஸ் என்று முன்பணமாகக் கொடுத்து வேலைக்கு சேர்க்கின்ற னர். அந்தத் தொகையை திரும்பக் கட்ட முடியாமல் தொழிலாளர்கள் சிக்கிக்கொள்கின்றனர். குறைந்த வருமானத்தில் வாழ முடியாமல் வட்டிக்குக் கடன் வாங்கி அதை திரும்பக் கட்ட முடியாத அவமானத் தால் பலர் தற்கொலை செய்யும் நிலைமை இந்த தொழிலில் உள்ளது. நாமக்கல் போன்ற சில மாவட்டங்க ளில் கடன் வலையில் சிக்கி தன் உடம்பில் உள்ள கிட்னியை விற்று கடனை அடைக்கும் மோசமான நிலை உள்ளது. ஒன்றிய மோடி அரசின் தவறான கொள்கைகள் காரணமாக விசைத்தறித் தொழில் நெருக்கடியில் இருந்து வருகிறது. தற்போது நூல் விலை உயர்வு தாங்க முடி யாத பாதிப்பை உருவாக்கி உள்ளது. தொழிலாளர்கள் வேலை இழந்து வறுமையின் பிடியில் சிக்கி உள்ள னர். எனினும் தொழிலைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்காமல் மோடி அரசு வேடிக்கை பார்க்கிறது. தமிழ்நாடு விசைத்தறித் தொழிலா ளர் சம்மேளனம் (சிஐடியு), 8 மணி நேரம் வேலைக்கு மாத ஊதியம் ரூ.21000 தர வேண்டும், பஞ்சப்படி வழங்க வேண்டும்.

ஓவர்டைம் வேலைக்கு இரட்டிப்புச் சம்பளம், இலவச வீடுகள் வழங்க வேண்டும். குழந்தைகள் உயர்கல்வி செலவை அரசே ஏற்க வேண்டும், அடையாள அட்டை, இஎஸ்ஐ, பிஎப் சட்ட உரி மைகள் அமலாக்க வேண்டும் என வலியுறுத்தி இடைவிடாமல் போராட் டங்களை முன் எடுத்து வருகிறது. அகில இந்திய தொழிற்சங்க மையம், பஞ்சாலை, விசைத்தறித் தொழிலாளர்களை நாடு முழுவதும் ஒருங்கிணைத்து அணி திரட்டி சமூக பாதுகாப்பு உரிமைகளை பெற்றுத் தரவும், விசைத்தறித் தொழிலை நெருக்கடியில் இருந்து மீட்கவும் அகில இந்திய மாநாட்டை 2022 மே 17 அன்று கோவையில் நடத்துகிறது. இந்த மாநாடு நடைபெறும் செய்தி தொழிலாளர்களுக்கு நம் பிக்கையை துளிர்க்கச் செய்துள்ளது. காலம் காலமாக 14 தறி ஓட்டியும், வாழ்க்கையில் வறுமைதான் மிஞ்சி யது என்ற ஏக்கத்துடன் வேதனையில் உள்ளனர். சுரண்டலின் பிடியில் சிக்கியுள்ள தொழிலாளர்களுக்கு விடியலுக்கான புதிய நம்பிக்கைதான் அகில இந்திய மாநாடு. மோடி அரசின் தொழிலாளர் விரோத சட்டத் திருத்தம், அடக்குமுறைச் சட்டங்களை தூக்கி எறிந்து நாடு முழுவதும் போராட்டத்தை முன்னெ டுப்போம்! வெற்றி நிச்சயம்! ஓங்கி முழங்கி உரிமைகளை பெற்றிடு வோம்!!