districts

img

கடலூரில் தூய்மை பணியாளர்களுக்கு நல வாரிய அட்டை வழங்கும் விழா

கடலூர், மே 11-

    கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட் சித் துறை ஊழியர் சம்மேளனத்தின் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நலவாரிய அட்டை வழங்கும் விழா நடைபெற்றது. இந்த  நிகழ்ச்சிக்கு சங்கத்தின் நிர்வாகி பழனி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பி.ராஜேந்திரன் வரவேற்றார்.

   கடலூர், விழுப்புரம் மாவட்ட தாட்கோ மேலாளர் எஸ்.மணிமேகலை 350 தூய்மை பணியாளர்களுக்கு தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் நலவாரிய உறுப்பினர் அட்டையை வழங்கினார்.

    இதில் சிஐடியு மாவட்டத் தலைவர் பி.கருப்பையன், கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வி.கிருஷ்ணமூர்த்தி, சங்கத்தின் புவனகிரி ஒன்றிய பொறுப்பாளர் சதானந்தம், மாவட்ட நிர்வாகி ஸ்டாலின் ஆகியோர் பேசினர். பொருளாளர் வி.கே.பாஸ்கரன் நன்றி கூறினார். மாவட்ட முழுவதிலுமிருந்து ஏராளமான தூய்மை பணியாளர்கள் கலந்து  கொண்டனர்.