சென்னை, டிச. 13- உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை யொட்டி தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகள் சங்கத்தின் வட சென்னை மாவட்டக் குழு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஞாயிறன்று (டிச 11) ஆர்.கே.நகரில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஆர்.ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கே.மாரியப்பன், டாக்டர் அமுதன், 41ஆவது வட்ட மாமன்ற உறுப்பினர் பா விமலா, 39ஆவது வட்ட மாமன்ற உறுப்பினர் கே.தேவி கதிரேசன் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இதில் 3 சக்கர சைக்கிள் 4 பேருக்கும், 50க்கும் மேற்பட்டவர்களுக்கு மளிகை பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் ரமேஷ், வட சென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.ராணி, பொருளாளர் ஆர்.நடராஜன், மாதர் சங்கத்தின் வடசென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.பாக்கியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர். கே. நகர் பகுதிச் செயலாளர் எஸ்.தில்சாத் பேகம் நன்றி கூறினார்.