திருவண்ணாமலை, பிப்.2- திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத் தூர் வட்டம், வேட்டவலம் நகரில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல் பட்டு வருகிறது. இங்கு வேட்டவலம், ஆவூர், ராஜந்தாங்கல் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங் களை சேர்ந்த விவசாயிகள் நெல் மூட்டைகள் எடுத்து வருகின்றனர். எடை போடும் போது பெரும் மோசடி நடை பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஒரு மூட்டையில் இரண்டு முதல் மூன்று கிலோ வரைக்கும் எடை குறைவாக மோசடி செய்வதை கண்டுபிடித்துள்ளனர். பிறகு, இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர்களுக்கு தகவல் கொடுத்தனர். இதை யடுத்து, அங்கு வந்த சங்கத் தின் நிர்வாகிகள் வேல் மாறன், ரஜினி ஏழுமலை, செந்தில் எடை மோசடியை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அதிகாரி கள் விவசாயிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். இனி வரும் காலங்களில் இது போன்ற நடைபெறாது என்று உறுதியளித்தனர். அதைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.