சென்னை திருவிக நகர் தொகுதிக்கு உட்பட்ட ஓட்டேரி கிருஷ்ணதாஸ் சாலையில் உள்ள பெரம்பூர் போக்குவரத்து பணிமனை முன்பு குளம் போல் தேங்கியுள்ள கழிவு நீர். இதனால் தொழிலாளர்கள் பணிமனைக்கு உள்ளே செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் அதில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. எனவே உடனடியாக தேங்கியுள்ள கழிவு நீரை அப்புறப்படுத்த வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.