மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெறும் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை விளக்கி அனைத்து மத்திய தொழிற் சங்கங்கள் சார்பில் வேலூர் காட்பாடி சாலை பச்சையப்பாஸ் அருகில் இருந்து நடைபயண பிரச்சாரம் துவங்கியது. சிஐடியு மாவட்டத் தலவர் எம்.பி.ராமச்சந்திரன், மாவட்டச் செயலாளர் எஸ்.பரசுராமன், ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் எஸ்ஏ.சிம்புதேவன், கே.ஆர்.சுப்ரமணியன் (தொமுச), எம்.ஏகாம்பரம் (ஐஎன்டியுசி) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.