சென்னை, பிப்.18- சென்னையில் மாநகராட்சி வாக்குச் சாவடிகளில் ஓட்டுப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலை யில் உள்ளன. வாக்குப்பதிவு மையங்களுக்கு மின்னணு எந்திரங்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்ல ப்பட்டன. சென்னையில் மட்டும் 1,100 இடங்கள் பதட்டமானவை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதுபோன்ற பதட்டமான வாக்குச்சாவடிகள் மற்றும் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர். பதட்டமான பகுதிகளில் அசம்பா வித சம்பவங்கள் நடைபெற்றால் உடனடியாக அங்கு விரைந்து செல்ல ஏதுவாக 846 அதிரடி படைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அதிரடி படையினர் அனைத்து இடங்களிலும் தயார் நிலையில் வாகனங்களில் இருப்பார்கள். ஏதாவது ஒரு பகுதியில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தால் உடனடியாக அங்கு அதிரடி படையினர் விரைந்து சென்று பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. சென்னையில் 18 ஆயிரம் காவலர் கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடு கிறார்கள். தாம்பரம், ஆவடி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளி லும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. இந்த 3 காவல் எல்லைக்குட் பட்ட பகுதிகளிலும் 24 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடு கிறார்கள். சென்னையில் 4 கூடுதல் ஆணையர்கள், 6 இணை ஆணையர் கள், 18 துணை ஆணையர்கள், 60 உதவி ஆணையர்கள் உள்ளிட்டோரும் பாதுகாப்பு பணிகளை மேற்பார்வை யிட உள்ளனர். ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் அமைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு மையம் முன்பு தனித்தனியாக காவலர் கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட உள்ளார். தேவை இல்லாத நபர்கள் வாக்குச்சாவடிக்குள் செல்வதை தடுப்பதற்காக நுழைவு வாயிலிலும் ஒரு காவலர் பணியில் ஈடுபட உள்ளார்.