districts

வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது காத்திருந்து வாக்களித்த வாக்காளர்கள்

காஞ்சிபுரம், ஏப்.19 - திருப்பெரும்புதூர் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால் மக்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து தங்களது வாக்குகளை செலுத்தினர். 2024 மக்களவைத் தேர்தல் (ஏப்.19) வெள்ளியன்று நடைபெற்றது. காஞ்சி புரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் சட்டப் பேரவை தொகுதியில் சுமார் 365 வாக்கு சாவடி கள் அமைக்கப்பட்டிருந்தது. காலை 7 மணி முதல் அந்தந்த மையங்களில் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக தொடங்கி நடை பெற்றது. வாக்குப்பதிவு இயந்திரம் பழுது திருப்பெரும்புதூர் ஒன்றியத்திற்குட் பட்ட ஆயா கொளத்தூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் ஒரு வாக்குப்பதிவு இயந்திரம் சரியாக வேலை செய்யவில்லை. இதனால் வாக்குகள் பதிவாகவில்லை. நீண்ட நேரமாக பழுது சரி செய்யப்படாததால் வேறொரு இயந்திரம் மாற்றப்பட்டு காலை 8:30 மணி அளவில் வாக்குப்பதிவு தொடங்கியது. நான்கு வாக்குச்சாவடிகளில்  மாற்றப்பட்ட இயந்திரம் மாத்தூர் ஊராட்சியில் அமைக்கப் பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் வி.விபேட் இயந்திரம் பழுதாகியது. சிக்கராய புரம் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி எண் 175 ல் விவிபேட் இயந்திரம் மதியம் 2மணிக்கு மேல் பழு தாகி இரண்டு மணி நேரம் சரி செய்யாத தால் வேறு இயந்திரம் மாற்றப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது. திருமங்கலம் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி எண் 51ல் வாக்குப்பதிவு இயந்திரம், விவிபேட், ஒப்புகை சீட்டு இயந்தி ரம் உள்ளிட்ட அனைத்து இயந்திரங்களும் பழுதாகியது. அனைத்து இயந்திரங்களும் மாற்றப்பட்டு வாக்குப்பதிவு நடைப்பற்றது.