districts

img

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர் எண்ணிக்கை உயர்ந்தது

விழுப்புரம், அக்.29-  விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதி நிதிகளான திமுக மாவட்ட பொறுப்பாளர் பொன்.கௌதமசிகாமணி, சிபிஎம் மாவட்டச் செயலாளர் என். சுப்பிரமணியன், சிபிஐ மாவட்டச் செயலாளர் ஆ. சவுரிராஜன் முன்னிலையில் வரைவு வாக்காளர்  பட்டி யலை மாவட்ட ஆட்சியர் சி.பழனி வெளியிட்டார். அதன்படி, இம்மாவட்ட த்தில் 8,34,285 ஆண்  வாக்காளர்கள், 8,57,251 பெண் வாக்காளர்கள், 223 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தமாக 16  லட்சத்து 91 ஆயிரத்து 759 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 18,901 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், 5693 வாக்கா ளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.  ஏற்கெனவே அறிவிக்கப்  பட்ட பட்டியலில் உள்ள வாக்காளரைக் காட்டிலும் 0.78 விழுக்காடு வாக்காளர் கள் கூடுதலாக உள்ளனர். 1.1.2025 தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெறும். இதற்காக நவம்பர் 16, 17, 23, 24 தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்றும் ஆட்சியர் கூறினார்.