மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் சென்னை மாநகராட்சி 123ஆவது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாமன்ற உறுப்பினர் எம்.சரஸ்வதி ஞாயிறன்று (பிப்.27) தேனாம்பேட்டை பகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். இதில் திமுக வட்டச் செயலாளர் வில்லவன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மாநிலக்குழு உறுப்பினர் ஏ.பாக்கியம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.குமார், ம.சித்ரகலா, பகுதிச் செயலாளர் ஐ.ஆர்.ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.